உச்சிதனை முகர்ந்தால்....
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஈழமக்களின் அவலங்கள் குறுந்தகடுகளாக வந்தபோது அதை கண்டு அழுததாக புழுகிய கருணாநிதியே அது தமிழக மக்களிடையே கொண்டுசெல்லபடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தடைவிதித்தும்,தகட்டை கையில் வைத்திருப்பவர்களை கைது செய்தும், கூடுதலாக ஓட்டுக்கு முதல்நாள் தமிழகம் முழுதும் மின் தடை ஏற்படுத்தியும் சாதனை செய்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார்.
ஊர் வாயை மூடலாம் உண்மையின் வாயை மூட முடியாது அல்லவா. இதோ உண்மை திரைப்படமாக வந்துவிட்டது. எந்தவொரு பரப்புரை நெடியும் இல்லாமல் எங்கள் இனம் பாதிக்கபட்டதற்கு உன் பதில் என்ன? என்று செருப்பாலடித்தார்ப்போல் பதிவாகியிருக்கிறது.
எதை ஒட்டுமொத்த ஓட்டுப்பொருக்கி அரசியல்வாதிகளும் மறைத்தார்களோ அது இன்று வெட்ட வெளிச்சமாக வெளிவந்திருக்கிறது. இதை ஒரு மிகமுக்கியமான கருவியாக நாம் ஏந்தி உலகெங்கும் கொண்டுசெல்லவேண்டியது தமிழராகிய அனைவரது கடமையாகும்.
இதோ நான் தொடங்கிவிட்டேன் நீங்கள் தொடருங்கள் தோழர்களே....
இந்த சுட்டியிலிருது தொடங்குங்கள் பரப்புரையை...
நன்றி: தமிழர் பறை: காணொளி : உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு முழு நிகழ்வு
thamizharparai.blogspot.com
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fthamizharparai.blogspot.in%2F2012%2F02%2Fblog-post_11.html&h=lAQFRPgxuAQETXh3XjHySpfchUwF7cWsXLKJ01koSQVE7SQ
மனிதனாக வாழ மதங்கள் தேவையில்லை மதங்களை கடந்து வாருங்கள் மனிதனாக வாழ்வோம்
Saturday, February 11, 2012
"உச்சிதனை முகர்ந்தால்" ஒட்டுமொத்த தமிழனத்தின் குரலாக...
Friday, February 10, 2012
மும்முனை போராட்டம்

முல்லை பெரியாறு
அன்று பெரியார் புரட்சி
"வைக்கம்" விடுதலைக்கு
இன்று பெரியாறு புரட்சி
"தமிழகம்" தன்னுரிமைக்கு
"தீ" பிடித்தால்
தண்ணீர் ஊற்றி அணைப்போம்
இங்கு
அணையால் "தீ"
புரட்சி "தீ"
வாருங்கள்
எரி நெய் ஊற்றி
வளர்போம்.
-------------------------------------------------

கூடங்குளம்
அணுக்கழிவுகள்
ஆபத்து இல்லையாம்
அறிவில் சிறந்த!!!
மனிதக்கழிவுகள்
மனம் மாறி பேசுகின்றன.
புகுஷிமா
போன இடம் தெரியவில்லை
நாகாசாகி என்ற
நரகம் போதவில்லையாம்
கல்பாக்கமோ
கண் அருகின் கல்லறை
போபாலோ
புதிய தலைமுறையினையும் விடவில்லை.
உலக கழிவுகளையும்
உலோக கழிவுகளையும்
தமிழன் தலையில்தான்
கொட்டனுமாம்
அணுக்கழிவின்
ஆபத்து குறைவுதான்
இந்த "அறிவு" கழிவுகளைவிட.
---------------------------------------------

இருட்டடிப்பு
இந்தையாவுக்கு
"தமிழகம் சேரி" என்றால்
எழுதிடுவோம்
புதிய வரலாறு.
இந்தியா ஒளிர்கிறதாம்
தமிழகத்தை எரியவிட்டு
தண்டோரா போடுகிறான்
டெல்லிக்காரன்.
அடே
பறையடித்தே
பழக்கப்பட்டவர்கள் நாங்கள்
உன் முடிவுக்கு
முரசு அடிக்கவைத்துவிடாதே.
இந்தியாவுக்கு
தமிழகம் சேரி என்றால்
நாம் சேர்ந்தே அடிப்போம்
ஆரியத்திற்கும் அதிகாரத்திற்கும்
ஆப்பு.
Monday, February 06, 2012
வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா? வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா? மு.குலாம் முஹம்மது.
1865 முதலே இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் மூலம் சிறுபான்மை முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.
இன்றளவும் பலகோடி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். 1947 இல் இந்தியா விடுதலையடைந்தபோது எல்லா மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை என சட்டம் அமைக்கப்பட்டது. இது குடிமக்களின் அடிப்படை உரிமை.
இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் பிரிவு 21. சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணை முறைப்படியன்றி வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது எனக் கூறுகின்றது. இதன் விளக்கம் (24) எந்த அளவுக்குச் செல்கின்றது என்றால், ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வது அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கின்றது.
ஆனால் வகுப்புக் கலவரங்களின்போது குடிமக்களின் உயிரை - குறிப்பாக சிறுபான்மையினரின் உயிரைப் பெரும்பான்மையினர், பட்டபகலில் பறித்து விடுகின்றார்கள். கும்பல், கும்பலாக வந்து சிறுபான்மையினரின் உயிரைப் பறித்து விடுகின்றார்கள். அத்தோடு இந்தக் கும்பலுடன் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டிட வேண்டிய அரசும், அதன் அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து கொள்கின்றார்கள். தவறிவிடுகின்றார்கள், என்பது மட்டுமல்ல, அவர்கள் பெரும்பான்மை கும்பல்களுடன் இணைந்து சிறுபான்மையினரைக் கொலையும் செய்கின்றார்கள் பல நேரங்களில் மாநில அரசுகளே இதற்குத் துணை நிற்கின்றன.
வகுப்புக் கலவரங்கள் ஒரு பார்வை:
ஜபல்பூரில் 1961 ஆம் ஆண்டு நடந்த தொடர் வகுப்பு கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். காவல்துறை இந்துத்துவவாதிகளுக்குத் துணை நின்றது. நாடே அல்லோலகல்லோலப்பட்டது. காவல் துறையினரின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1967 - இல் ஒரு குஜராத் போன்ற படுகொலைகள் ராஞ்சியில் நடைபெற்றது. எண்ணிக்கையில் அடங்காத முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியை வழிமறிக்க, அல்லது மக்களின் கவனத்தை வேறு திசைகளின் பக்கம் திருப்பி விட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ரகுபீர் தயாள் என்பர்தான் விசாரணையை மேற்கொண்டார். அவர்தான் முதன் முதலில் சுதந்திர இந்தியாவில் வகுப்புக் கலவரங்களின் தனித் தன்மைகளில் இரண்டனவற்றைக் குறிப்பிட்டார்.
ஒன்று வகுப்புக் கலவரங்களுக்கு முன்பு திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம், முஸ்லிம்களுக்கு எதிராக களமிறக்கப்படுகிறது. இரண்டு கலவரத்தின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர், பெரும்பான்மை சமூகத்தோடு கைகோர்த்துக் கொள்கின்றனர். அதிக அளவில் சிறுபான்மை முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதற்கும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கும் இது மிகவும் முக்கியமான காரணம்.
குஜராத் 2002 இனப்படுகொலைகள் குஜராத் முழுவதும் நடைபெற்றன. அதே குஜராத்தில் 1969இல் ஒரு பெரும் இனப்படுகொலை நடைபெற்றது. அது அஹ்மதாபாத்-ஐ மையப்படுத்தி நடைபெற்றது. இப்போதும் நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசு இயந்திரத்தை சுழற்றிடும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள், மனுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.
வழக்கம் போல் ஓர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை நீதிபதி ஜக் மோகன் ரெட்டி என்பவரே முன்னின்று நடத்தினார் அவரும் முஸ்லிம்களைப் பாதுகாத்திட வேண்டியவர்களே அவர்களுக்கெதிரான இனப்படுகொலையில் பங்கெடுத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கெதிராகக் 'கனைத்துக்' கூட காட்டவில்லை நமது மத்திய மாநில அரசுகள்.
1970 இல் பிவாண்டி, ஜால்கோன், மாஹாத் ஆகிய இடங்களில் தொடர் இனப்படுகொலைகள் இடம்பெற்றன.
இதிலும் காவல்துறை கொலைவெறிபிடித்த இரத்தக் காட்டேரிகளோடு துணை நின்று சிறுபான்மை முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்ததோடு அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பறிமுதல் செய்தது. இதனையும் விசாரிக்க ஒரு 'விசாரணை கமிஷன்' ஏற்படுத்தப்பட்டது இதற்கு நீதிபதியாக மாடோன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
1984 - இல் நெல்லிப் படுகொலைகள், மூன்று நாள்களாக இந்துத்துவவாதிகள், வேலும், வில்லும், வாளும் ஏந்தி வந்து ஓர் பள்ளிக் கூடத்தில் குழுமினார்கள் முஸ்லிம்களைக் கூட்டாகக் கொலை செய்திட! அவர்கள் தங்கள் எண்ணங்களை - என்ன செய்யப் போகின்றோம் என்பதை எள்ளவும் மறைக்கவில்லை.
ஆனாலும் தடுப்பாரோ தட்டிக் கேட்பாரோ இல்லை. மறுநாள் காலையில் தாரை தப்பட்டைகளை அடித்துக் கொண்டு மேளதாளங்களோடு வந்து முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் ஈனச் செயலை எளிதாக நிறைவேற்றினார்கள்.
இப்படி ஒரு நாளல்ல, மூன்று நாள்கள் தொடர்ந்து முஸ்லிம்களை கொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலையின்போது அரசின் அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் 2400. இதில் பெண்களும் குழந்தைகளும் - கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுக்களும் உண்டு.
அருகாமையில் இராணுவ முகாம். அலறி அடித்துக் கொண்டு செய்தியைச் சொன்னார்கள் முஸ்லிம்கள், காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது என்றால் இராணுவம் இது எங்கள் வேலை இல்லை எனக் கூறிவிட்டது.
1987 - இல் ஹாசிம்புரா..., இனப்படுகொலைகள். படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும் போது காவல்துறைக்கு முஸ்லிம்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் நடந்தவற்றைச் சொல்லுகின்றார்கள். வாருங்கள், காப்பாற்றுங்கள், என் கூப்பாடு போடுகின்றார்கள்.
என்ன ஆச்சரியம்...!
சற்று நேரத்திற்கெல்லாம் ஓர் காவல் துறை ஊர்தி வந்து நிற்கின்றது முஸ்லிம்கள், காப்பாற்றப்பட்டு விட்டோம் என நிம்மதி அடைந்தார்கள்.
காவல் துறையினரின் கருணை சற்று நீண்டது. எல்லோரும் வந்து காவல்துறையின் ஊர்தியில் ஏறிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள் ஏறிக்கொண்டார்கள் உயிருக்கு ஏங்கி நின்ற முஸ்லிம்கள். ஏறியவர்களுடன் ஊர்தி விரைந்தது. ஓரிரு நாட்களாகியும் ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. தேடினார்கள் அலைந்து அலைந்து அழுது புலம்பினார்கள். எந்தத் துப்பும் கிடைக்க வில்லை. அவர்கள் அத்தனை பேரையும் காவல்துறையினரே கொலை செய்து ஒரு ஏரியில் போட்டு விட்டார்கள். அந்த அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தால் அந்த ஏரியே சிவப்பு நிறமாக மாறிப்போனது செந்நிற ஏரி என்றே அதற்கு இப்போது பெயர்.
1989 - இல் பாகல்பூர் படுகொலைகள், இன்னும் கோரமும் குரூரமும் நிறைந்தனவாக நடைபெற்றன மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களில் இந்தச் சம்பவம் ஈட்டிகளாய் இறங்கியது.
முஸ்லிம் ஆண்களையெல்லாம், தனிமைப்படுத்தினர் சங்கப்பரிவாரத்தினர். அவர்களைஅழைத்துச் சென்று ஒரு குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பெண்களைப் 15 நாள்கள்வரை வைத்து தங்கள் இச்சைகளை விருப்பம்போல் தீர்த்துக் கொண்டார்கள். பின்னர் அழைத்துச் சென்று அதே குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பின்னர் அரசின் உதவியுடன் அந்தக் குளத்தையே மூடிவிட்டார்கள்.
ஒரு காவல்துறை தலைமை கண்கானிப்பாளர் ஒரு நூறு முஸ்லிம்களை அழைத்துச் சென்று காவல்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தார். அவர்கள் அத்தனை பேரும் பிணங்களாக வீழ்ந்துகிடந்தார்கள். காவலுக்கு நின்றவர்களின் கைங்கர்யம் அது.
இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரில் ஒருவர் முஸ்லிம் இன்ஸ்பெக்டர். அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதையும் காவல் துறையினரே செய்வதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. என்ன அநியாயம்? என்ன செய்கின்றீர்கள்? என தனக்குக் கீழுள்ள காவல்துறை அதிகாரிகளைக் கேட்டார். கேள்வியை முடிப்பதற்குள் அந்த இன்ஸ்பெக்டர் பிணமாக சாய்ந்தார். அவரது முதுகையும் மார்பையும் துளைத்துக் கொண்டு சென்றது ஒரு துப்பாக்கிக் குண்டு.
அந்த முஸ்லிம் இன்ஸ்பெக்டர் உடலில் குண்டைப் பாய்ச்சியவர் அவருக்குக் கீழ் வேலை செய்த சப் - இன்ஸ்பெக்டர். இந்த சப் - இன்ஸ்பெக்டரை தண்டிக்க முடியவில்லை, இடமாற்றம் கூட செய்ய முடிய வில்லை
பின்னர் வழக்கம் போல விசாரணை கமிஷன் என்ற கண்துடைப்பு நாடகம் நடைபெற்றது.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு விசாரணையை நடத்தினார். அரசியல்வாதிகள் யார், யார் அந்த இனப்படுகொலைகளுக்குக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். அரசு அதிகாரிகள் யார்? யார் இனப்படுகொலைகளைச் செய்தார்கள் என்பதைக் குறிப்பிட்டார்.
ஆனால் நடந்தது வேறு : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையில் பிரதான குற்றவாளியாகக் காட்டப்பட்ட பால் தாக்கரேயின் கட்சி ஆட்சிக்கு வந்தது. பல அதிகாரிகள் ஓய்வு பெற்றார்கள். மீதமிருந்தோர் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, பதவி உயர்வைப் பெற்றார்கள்.
2002 குஜராத் இனப்படுகொலையின் தளகர்த்தனாக இருந்த மோடி இரண்டு முறை முதலமைச்சரானார். அந்த இனப்படுகொலைகளின்போது, நியாயமாக அதிகாரிகள் (ஸ்ரீகுமார்) போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டது. இன்னும் 'சஞ்சய்பாட்' போன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இனப்படுகொலைகளுக்க உதவியாக இருந்த அதிகாரிளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
தடுப்புச்சட்டம் 2005
இப்படி வகுப்பு கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் உதவிகளைச் செய்வோர் ஆட்சிளையும் பதவி உயர்வையும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில்தான் இவர்களைத் தண்டிக்கும் வழிமுறைகளைக் காண மனித உரிமையாளர்கள் ஒரு சட்டம் வேண்டும் என்றதொரு கோஷத்தை முன்வைத்தார்கள். இந்த கோஷங்கள் 2005 முதலே எழுப்பப்பட்டன. காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களை காப்பாற்றாவிட்டாலும், ஏமாற்றவது கடமை என நினைத்தது. தனது ஆகவே அப்படியரு சட்டத்தை யாத்திடும் வழிமுறைகளை மேற்கொண்டது.
இதற்கான பொறுப்பை தேசிய ஆலோசனை குழுவிடம் ஒப்படைத்தது. இந்த தேசிய ஆலோசனை குழு மிகவும் முக்கியமானதொரு அமைப்பு. நாட்டை ஆளும் அமைப்பு எனச் சொன்னால் அது மிகையாகாது. இதனால்தான் இதன் தலைவராக சோனியா காந்தி அவர்கள் இருக்கின்றார்கள்..
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான இந்த தேசிய ஆலோசனை குழு, ஒரு சட்டத்தை வரைந்தது.
இந்தச் சட்டத்தின் நோக்கம் இனப்படுகொலைகளை - வகுப்புவாத கொலைகளைச் செய்கின்றபோது அதைத் தடுக்கத் தவறிய, ஆட்சியாளர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்பு கலவரங்களை நடத்துவதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் (சங்கப்பரிவாரம்) போன்ற கும்பல்களைத் தடுக்க தவறிய அதிகாரிகளைத் தண்டிக்கவேண்டும்.
வகுப்புக் கலவரங்கள் நடக்கின்றபோது தடுக்கத்தவறும் அதிகாரிகள், அதற்கு உதவிகளைச் செய்ய முன்வரும் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினர், இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
கற்பழிக்கப்படும் பெண்கள், அவமானப் படுத்தப்படும் பெண்கள், இவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவேண்டும்.
வகுப்புக் குரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது - அல்லது வெளியேறுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது. இதற்கு காரணமானவர்களைத் தண்டிப்பது.
நம்மைப் பொறுத்தவரை சங்கப்பரிவார அமைப்புகளை முழுமையாகத் தடை செய்யாத வரை வகுப்புக்கலவரங்களை தடுத்து நிறுத்திட இயலாது.
வகுப்புக் கலவரங்களை நிகழ்த்தினால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தரை மட்டமாக்கினால், தேர்தலில் வென்று, பதவிகளைப் பெறலாம் என்றாகிவிட்ட நிலையில், முழுமையான தடையை அரசு ஆலோசிக்கத் தயங்குகிறது.
இந்தச் சட்டம் வந்தால் எல்லாம் நடந்துவிடும் வகுப்பு கலவரம் குறைந்துவிடும் என்பது கனவுதான்.
இந்தச் சட்டவரைவில் சொல்லப்படும் பல குற்றங்கள் எற்கனவே நமது இந்திய தண்டனைச் சட்டத்தில் இருப்பவைதான். ஆனால் அவை செயல் படுத்தப்படுவதில்லை.
வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்பவர்களை தடுக்க, சமூகங்களுக்கிடையேயுள்ள நல்லுறவை கெடுக்க முனைபவர்களை, தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 இருக்கின்றது. ஆனால் இஃது அப்பாவித்தனமாகக் குழுமும் முஸ்லிம்களை கேள்விக்கணக்கில்லாமல் தடுப்புக் காவலில் வைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
சட்டத்தின் சிறப்பு :
மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டம் கடமை தவறும் அதிகாரிகளைத் தண்டிக்க வகைசெய்கின்றது எனக் கூறுகின்றார்கள். வகுப்புக் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டால். அவை நீண்ட நாள்களாக நீடித்தால், அந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகள், தங்கள் கடமைகளில் தவறிவிட்டார்கள் எனக்கருதப்படும் என்றொரு பிரிவு இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கடமை தவறுவோரை தண்டிப்பதற்கு நமது இந்திய தண்டனை சட்டத்தில் வழி இருந்தாலும் இந்தப்பகுதி சற்று விசாலமானது என்கின்றார்கள், மனித உரிமை ஆர்வலர்கள்.
நடப்பிலிருக்கும் சட்டங்கள் வகுப்புக் கலவரத்திற்கான முன்னேற்பாடுகளைத் தடுக்கத் தவறியதை கடமை தவறிய குற்றமாக ஏற்பதில்லை மாறாக கலவரம் நடந்தபின்பு வரும் நிகழ்வுகளில் கடமை தவறுபவர்களையே தண்டிக்க வகை செய்கின்றது.
சட்டத்தின் இந்தப் பிரிவுகள், நிச்சயமாக அதிகாரிகள் வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோவதை, உதவி செய்வதை நிச்சயமாகத் தடுக்கும் என்கின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
சட்டத்தின் செயல்பாடுகள்:
இந்தச் சட்டத்தின் படி, தேசிய அளவில் ஓர் முகவாண்மை ஏற்பாடு செய்யப்படும். அதன் பெயர், தேசிய வகுப்பு நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீட்டு ஆணையம்.
இந்த ஆணையம் தான் இந்தச் சட்டத்தை அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும்.
இதன் தலைவராக மத்தியில் பிரதமர் இருப்பார். மாநில அளவில் இதுபோன்ற ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அதன் தலைவராக மாநில முதலமைச்சர் இருப்பார்.
மாநில அமைப்பில் இந்த ஆணையத்தை ஏற்படுத்துவதன் நோக்கம், மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரச தலையிட்டு விடக்கூடாது என்பதே!
ஏனெனில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவது என்பது, மாநில அரசின் கடமை, உரிமை. இச்சட்டம் மாநில அரசின் உரிமைகளில் தலை இடுகிறது என குஜராத் முதல்வர் மோடியும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்த்தார்கள். ஆகவே இந்த ஆணையம், மாநில அமைப்புகளை ஏற்படுத்திற்று. இதையும் பலர் எதிர்த்தார்கள். ஆனால் மத்திய அரசு விட்டுத் தந்திடவில்லை.
தேசிய சமய நல்லிணக்க ஆணையம் சட்டத்தின் செயல்பாடு
சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்கப் போகின்றோம், என மார்தட்டி வந்த இந்தச் சட்டம் இந்திய தேசிய மத நல்லிணக்க ஆணையம் என்ற அளவில் சுருங்கிக் கொண்டது.
என்ன அதிகாரம்?
மொத்தச் சட்டத்தையும் செயல்படுத்துகின்ற பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுத் தந்திடுவதும் இந்த ஆணையத்தின் பொறுப்பு இந்தச் சட்டத்தின் அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தின் சொல்லாட்சியில் நிவாரணங்களுக்குப் பெயர் இழப்பீடுகள். இழப்பீடுகள் உரியவர்களுக்குச் சென்று சேருகின்றனவா? என்பதைக் கண்காணிக்கின்ற பொறுப்பும் இந்த ஆணையத்திற்கு உண்டு.
ஆணையத்தின் அதிகாரம்?
இப்படி எல்லாப் பொறுப்புகளையும் ஒன்றாய் சுமக்கும் இந்த ஆணையத்தின் அதிகாரம் என்ன?
இந்த ஆணையம் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். இந்த ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்கமறுத்து விட்டால், இந்த ஆணையம் நீதிமன்றங்களை அணுகலாம் என்று கூறுகின்றது.
அரசுகள் ஏற்கமாட்டா என்பதை நாமறிவோம். நரேந்திர மோடிகள் முதலமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது? 'வாஜ்பேயி' போன்றவர்கள் பிரதம அமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது?
2002 இனப்படுகொலைகளின்போது 'வாஜ்பேயி' குஜராத் நமது சோதனை கூடம் இதனை நாம் இந்தியா முழுவதும் கொண்டு சென்றிட வேண்டும் எனப் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்தச் சட்டம் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாகப் பயன்படுத்துகின்ற அளவில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
நேரடியாகவே அவர்கள் அத்தனை அதிகாரங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட தேவையானால் முதலமைச்சர் மீதும், வாஜ்பேயி போன்றவர்கள், பிரதம அமைச்சரானால் அவர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கூப்பாடு நம் நாட்டைப் பொறுத்தவரை ஏட்டுச் சுரைக்காய்தான். அவை நாட்டு நடப்பாக ஆகாதவரை எந்தச் சட்டமும் எந்த நிவாரணத்தையும் தந்திட முடியாது
நீதி மன்றங்கள்...?
நீதி மன்றங்கள், இந்தியாவில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அநீதி மன்றங்களாகி வெகுநாள்களாகி விட்டன. ஷைத்தானும் குரங்குகளும் நீதிமன்ற தீர்ப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அப்பாவி சிறுபான்மை சமுதாயத்தவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்திடும் கோரம், அதுவும் எந்த ஆதாரமுமில்லாமல் சிறையில் வைத்திடும் அவலம் இந்தியாவில் தான் மிகவும் அதிகம். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சிறையில் வைத்தபின், அவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்துத்தீவிரவாதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.
அதேபோல் நீதிபதிகளை தண்டிக்கவும் வேண்டும். இல்லையேல் எந்தச் சட்டமும் சிறுபான்மையினர் மீது ஏவிவிடப்படும் எந்தத் தாக்குதலிலிருந்தும் இச்சட்டங்கள் அவர்களைக் காப்பாற்றிடாது. சிறுபான்மையினருக்கு நீதிமன்றங்கள் வழி என்ன கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், ராஜீவ்தாவான் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
“சிறுபான்மையினருக்கு (நமது நீதி மன்றங்களில்) நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல, அவர்கள் நீதியின் பெயரால், கொடுமைப்படுத்தப்படுவார்கள்.”
ராஜீவ்தாவான் அவர்களின் சொற்கள் எந்த அளவுக்கு நம் நாட்டின் நிதர்சனம் என்பதை, உணர்ந்திட பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதி மன்றம் வரை வழங்கிய தீர்ப்புகளிலிருந்து தெரிந்திடலாம்.
அதேபோல், குண்டு வெடிப்பு விவகாரங்களில், அப்பாவி முஸ்லிம்களை சிறையில் வைத்திட நீதிமன்றங்கள் எந்தத் தயக்கத்தையும் காட்டுவதில்லை.
அதே நேரத்தில் உண்மையிலேயே அந்த குண்டு வெடிப்புகளில், கைதாகும், இந்துத் தீவிரவாதிகளுக்கு உடனேயே பிணைகளை வழங்கிவிடுகின்றது. ஆக நீதிமன்றங்களின் பார்வையும் போக்கும் மாறிடாதவரை எந்தச் சட்டத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பைப் பெற்றிட மாட்டார்கள்.
வகுப்புவாத வன்முறைத் தடுப்புச்சட்டத்தின் இப்போதைய நிலை....?
இந்தச் சட்டத்தைத் தயாரித்தது என்,ஏ,சி என்ற தேசிய ஆலோசனை குழு, அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள். இந்தச் சட்ட வரைவு இதுவரை அமைச்சரையின் ஒப்புதலுக்குக் கூட வைக்கப்படவில்லை காரணம், இதற்கு இந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து மட்டுமல்ல, முஸ்லிம்களின் நண்பர்களைப் போல்காட்டிக் கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பும் தான்.
அமைச்சரவையின், ஒப்புதலுக்குப்பின், இது நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் வென்றபின் இந்தச் சட்டம் தேர்வுகுழுக்களில் (sறீமீநீt நீஷீனீனீவீறீறீநீமீ) விவாதிக்கப்படும் பின்னர் மேலவையில் விவாதிக்கப்படும் பின்னர் இந்தச் சட்டம், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் இத்தனையையும் இது கடக்கும் என எதிர்ப்பார்பதற்கில்லை.
இரண்டு சட்டவரைவுகள்
இந்தச் சட்டத்தின் முதல்வரைவு சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழு வரைந்தது.
இந்த வரைவில் எது வகுப்புவாத வன்முறை என்பதை வரையறுப்பதில் பல குளறுபடிகள்.
இதனால் மனித உரிமை அமைப்புகள், ஓர் சட்டவரைவை முன் வைத்தன. அது ஹர்ஷ் மந்திர் அவர்களின் தலைமயில் அமைந்த குழு. இந்தக் குழு வரைந்த சட்டம் செயலுக்கு வந்தால் நாம் எதிர்ப்பார்ப்பதைப் போல் பல நேரடி நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் வரவாய்ப்பில்லை என்றே படுகின்றது.
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான குழுவின் சட்டவரைவே இன்னும் அமைச்சரவையை எட்டிப்பார்க்காத நிலையில் ஹர்ஷ் மந்திர் தலைமையிலானவர்கள் எழுதிய சட்ட வரைவு எந்த அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை.
தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம்.
இந்த வருடம் 2011 செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் நமது தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தச் சட்ட வரைவு பற்றிய ஒரு விவாதமே முழுமையாக நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்றவர்கள் எல்லா நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு சட்டத்தை எதிர்த்தார்கள் இதனை ஆதரித்து அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மௌனம் சாதித்தார்கள் இதனால் இந்தச் சட்டம் கிடப்பில் போடப்படும் நிலையே அதிகம் என்றானது.
இல்லையேல் நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடரில் இச்சட்டம் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும்.அண்ணாஹஸாரேயும் வகுப்புவாத வன்முறை சட்டமும்.
அண்ணா ஹஸாரே-இன் வாழ்க்கையும் இப்போதைய சமூக நடவடிக்கைகளும் இந்துத்துவாவில் தேய்த்து எடுக்கப்பட்டதாகவே அமைந்திருக்கின்றது.
அவருடைய அனைத்து நடவடிக்கைகளும் இந்துத்துவ கட்சியாகிய பாரதீய ஜனதா கட்சிக்கும், இந்துத்தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.
சமூக ஆர்வலர்கள் இந்தியாவை மூன்று 'C'கள் பீடித்திருக்கின்றன அவை Castism, Communalism, Corruption அதாவது ஜாதியம், வகுப்புவாதம், லஞ்சம் என்பவைதான் இந்தியாவின் தீர்க்க முடியாத நோய் என்பார்கள். அதில் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஜாதியத்தில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர் அண்ணாஹஸாரே! அடுத்து ஒழிக்கப்பட வேண்டிய வகுப்பு வாதத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டவர் செயல்படுபவர். எந்த அளவுக்கு என்றால் மோடியையே புகழும் அளவுக்குப் போய் விட்டார். அதன்பின் மக்கள் தந்த அழுத்தங்களால்தான் அதனை பின்வாங்கினார்
'லஞ்சத்தை' கையிலெடுத்துக் கொண்டார் மற்ற இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் மக்கள் கருத்தையும் கவனத்தையும் திசை திருப்பிவிட்டார் மீடியாக்களின் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதனால் இந்த சட்டத்தையும் - வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தையும் மக்கள் கவனத்திலிருந்து மறைத்துவிட்டார். மக்கள் மத்தியில் ஓர் விவாதமாகாமல் போய்விட்டது.
இந்த வகையிலும் அவர் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஓர் செஞ்சோற்றுக் கடனையே ஆற்றி இருக்கின்றார்.
சுப்பிரமணியசாமி முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் கட்டுரையை எழுதி நான்தான் மிகப்பெரிய இந்துத்துவாதி எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இப்போது இந்த வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்திலும் தனது மூக்கை நுழைத்திருக்கின்றார்.
இந்தச் சட்டத்தை வரைந்ததன் மூலம் சோனியா காந்தி இந்துக்களுக்குத் தீராத துரோகத்தைச் செய்துவிட்டார் எனக் கூறி அவர் மீது ஓர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கின்றார் டெல்லியில்.
தாருல் இஸ்லாம் வைகறை வாசகர் வட்டம்.
சோனியா காந்தி தலைமையிலான குழுவரைந்த சட்டம், ஜீலை 4 ஆம் நாள்வரை மக்களின் கருத்துக்காக இணையதளத்தில் வைக்கப்பட்டிருந்தது நாம் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டி இருப்பவற்றை அதில் நமது கருத்தாகத் தெரிவித்தோம்.
ஆனால் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தினோம், காரணம் சங்கப்பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை ஓரளவுக்கு குறைக்கவாவது இந்தச் சட்டம் பயன்படும்.
கிருஸ்தவ அமைப்புகள்
அத்தோடு கிருஸ்தவ அமைப்புகள் இந்தச் சட்டமே வரவேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் ஜான் டயான் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் அழுத்தமாகப் பேசினார். மற்றொரு சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கிருஸ்தவர்களோடு, தோளோடு தோளாக நிற்கவிரும்பினோம். ஆகவே இந்தச் சட்டத்தை ஆதரித்தோம்.
கிருஸ்தவ அமைப்புகள் 57 திருத்தங்களை இந்தச் சட்டத்தில் கொண்டு வந்தார்கள் அவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தச் சட்டத்தைப் பார்த்து இந்துத்துவவாதிகள் பதறுகின்றார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் சிறுபான்மையினர் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்திட இயலாது. சுருங்கச் சொன்னால் அவர்கள் இயங்கிட முடியாது
நன்றி: கீற்று
இன்றளவும் பலகோடி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். 1947 இல் இந்தியா விடுதலையடைந்தபோது எல்லா மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை என சட்டம் அமைக்கப்பட்டது. இது குடிமக்களின் அடிப்படை உரிமை.
இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் பிரிவு 21. சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணை முறைப்படியன்றி வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது எனக் கூறுகின்றது. இதன் விளக்கம் (24) எந்த அளவுக்குச் செல்கின்றது என்றால், ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வது அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கின்றது.
ஆனால் வகுப்புக் கலவரங்களின்போது குடிமக்களின் உயிரை - குறிப்பாக சிறுபான்மையினரின் உயிரைப் பெரும்பான்மையினர், பட்டபகலில் பறித்து விடுகின்றார்கள். கும்பல், கும்பலாக வந்து சிறுபான்மையினரின் உயிரைப் பறித்து விடுகின்றார்கள். அத்தோடு இந்தக் கும்பலுடன் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டிட வேண்டிய அரசும், அதன் அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து கொள்கின்றார்கள். தவறிவிடுகின்றார்கள், என்பது மட்டுமல்ல, அவர்கள் பெரும்பான்மை கும்பல்களுடன் இணைந்து சிறுபான்மையினரைக் கொலையும் செய்கின்றார்கள் பல நேரங்களில் மாநில அரசுகளே இதற்குத் துணை நிற்கின்றன.
வகுப்புக் கலவரங்கள் ஒரு பார்வை:
ஜபல்பூரில் 1961 ஆம் ஆண்டு நடந்த தொடர் வகுப்பு கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். காவல்துறை இந்துத்துவவாதிகளுக்குத் துணை நின்றது. நாடே அல்லோலகல்லோலப்பட்டது. காவல் துறையினரின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1967 - இல் ஒரு குஜராத் போன்ற படுகொலைகள் ராஞ்சியில் நடைபெற்றது. எண்ணிக்கையில் அடங்காத முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியை வழிமறிக்க, அல்லது மக்களின் கவனத்தை வேறு திசைகளின் பக்கம் திருப்பி விட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ரகுபீர் தயாள் என்பர்தான் விசாரணையை மேற்கொண்டார். அவர்தான் முதன் முதலில் சுதந்திர இந்தியாவில் வகுப்புக் கலவரங்களின் தனித் தன்மைகளில் இரண்டனவற்றைக் குறிப்பிட்டார்.
ஒன்று வகுப்புக் கலவரங்களுக்கு முன்பு திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம், முஸ்லிம்களுக்கு எதிராக களமிறக்கப்படுகிறது. இரண்டு கலவரத்தின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர், பெரும்பான்மை சமூகத்தோடு கைகோர்த்துக் கொள்கின்றனர். அதிக அளவில் சிறுபான்மை முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதற்கும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கும் இது மிகவும் முக்கியமான காரணம்.
குஜராத் 2002 இனப்படுகொலைகள் குஜராத் முழுவதும் நடைபெற்றன. அதே குஜராத்தில் 1969இல் ஒரு பெரும் இனப்படுகொலை நடைபெற்றது. அது அஹ்மதாபாத்-ஐ மையப்படுத்தி நடைபெற்றது. இப்போதும் நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசு இயந்திரத்தை சுழற்றிடும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள், மனுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.
வழக்கம் போல் ஓர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை நீதிபதி ஜக் மோகன் ரெட்டி என்பவரே முன்னின்று நடத்தினார் அவரும் முஸ்லிம்களைப் பாதுகாத்திட வேண்டியவர்களே அவர்களுக்கெதிரான இனப்படுகொலையில் பங்கெடுத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கெதிராகக் 'கனைத்துக்' கூட காட்டவில்லை நமது மத்திய மாநில அரசுகள்.
1970 இல் பிவாண்டி, ஜால்கோன், மாஹாத் ஆகிய இடங்களில் தொடர் இனப்படுகொலைகள் இடம்பெற்றன.
இதிலும் காவல்துறை கொலைவெறிபிடித்த இரத்தக் காட்டேரிகளோடு துணை நின்று சிறுபான்மை முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்ததோடு அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பறிமுதல் செய்தது. இதனையும் விசாரிக்க ஒரு 'விசாரணை கமிஷன்' ஏற்படுத்தப்பட்டது இதற்கு நீதிபதியாக மாடோன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
1984 - இல் நெல்லிப் படுகொலைகள், மூன்று நாள்களாக இந்துத்துவவாதிகள், வேலும், வில்லும், வாளும் ஏந்தி வந்து ஓர் பள்ளிக் கூடத்தில் குழுமினார்கள் முஸ்லிம்களைக் கூட்டாகக் கொலை செய்திட! அவர்கள் தங்கள் எண்ணங்களை - என்ன செய்யப் போகின்றோம் என்பதை எள்ளவும் மறைக்கவில்லை.
ஆனாலும் தடுப்பாரோ தட்டிக் கேட்பாரோ இல்லை. மறுநாள் காலையில் தாரை தப்பட்டைகளை அடித்துக் கொண்டு மேளதாளங்களோடு வந்து முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் ஈனச் செயலை எளிதாக நிறைவேற்றினார்கள்.
இப்படி ஒரு நாளல்ல, மூன்று நாள்கள் தொடர்ந்து முஸ்லிம்களை கொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலையின்போது அரசின் அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் 2400. இதில் பெண்களும் குழந்தைகளும் - கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுக்களும் உண்டு.
அருகாமையில் இராணுவ முகாம். அலறி அடித்துக் கொண்டு செய்தியைச் சொன்னார்கள் முஸ்லிம்கள், காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது என்றால் இராணுவம் இது எங்கள் வேலை இல்லை எனக் கூறிவிட்டது.
1987 - இல் ஹாசிம்புரா..., இனப்படுகொலைகள். படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும் போது காவல்துறைக்கு முஸ்லிம்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் நடந்தவற்றைச் சொல்லுகின்றார்கள். வாருங்கள், காப்பாற்றுங்கள், என் கூப்பாடு போடுகின்றார்கள்.
என்ன ஆச்சரியம்...!
சற்று நேரத்திற்கெல்லாம் ஓர் காவல் துறை ஊர்தி வந்து நிற்கின்றது முஸ்லிம்கள், காப்பாற்றப்பட்டு விட்டோம் என நிம்மதி அடைந்தார்கள்.
காவல் துறையினரின் கருணை சற்று நீண்டது. எல்லோரும் வந்து காவல்துறையின் ஊர்தியில் ஏறிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள் ஏறிக்கொண்டார்கள் உயிருக்கு ஏங்கி நின்ற முஸ்லிம்கள். ஏறியவர்களுடன் ஊர்தி விரைந்தது. ஓரிரு நாட்களாகியும் ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. தேடினார்கள் அலைந்து அலைந்து அழுது புலம்பினார்கள். எந்தத் துப்பும் கிடைக்க வில்லை. அவர்கள் அத்தனை பேரையும் காவல்துறையினரே கொலை செய்து ஒரு ஏரியில் போட்டு விட்டார்கள். அந்த அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தால் அந்த ஏரியே சிவப்பு நிறமாக மாறிப்போனது செந்நிற ஏரி என்றே அதற்கு இப்போது பெயர்.
1989 - இல் பாகல்பூர் படுகொலைகள், இன்னும் கோரமும் குரூரமும் நிறைந்தனவாக நடைபெற்றன மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களில் இந்தச் சம்பவம் ஈட்டிகளாய் இறங்கியது.
முஸ்லிம் ஆண்களையெல்லாம், தனிமைப்படுத்தினர் சங்கப்பரிவாரத்தினர். அவர்களைஅழைத்துச் சென்று ஒரு குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பெண்களைப் 15 நாள்கள்வரை வைத்து தங்கள் இச்சைகளை விருப்பம்போல் தீர்த்துக் கொண்டார்கள். பின்னர் அழைத்துச் சென்று அதே குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பின்னர் அரசின் உதவியுடன் அந்தக் குளத்தையே மூடிவிட்டார்கள்.
ஒரு காவல்துறை தலைமை கண்கானிப்பாளர் ஒரு நூறு முஸ்லிம்களை அழைத்துச் சென்று காவல்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தார். அவர்கள் அத்தனை பேரும் பிணங்களாக வீழ்ந்துகிடந்தார்கள். காவலுக்கு நின்றவர்களின் கைங்கர்யம் அது.
இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரில் ஒருவர் முஸ்லிம் இன்ஸ்பெக்டர். அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதையும் காவல் துறையினரே செய்வதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. என்ன அநியாயம்? என்ன செய்கின்றீர்கள்? என தனக்குக் கீழுள்ள காவல்துறை அதிகாரிகளைக் கேட்டார். கேள்வியை முடிப்பதற்குள் அந்த இன்ஸ்பெக்டர் பிணமாக சாய்ந்தார். அவரது முதுகையும் மார்பையும் துளைத்துக் கொண்டு சென்றது ஒரு துப்பாக்கிக் குண்டு.
அந்த முஸ்லிம் இன்ஸ்பெக்டர் உடலில் குண்டைப் பாய்ச்சியவர் அவருக்குக் கீழ் வேலை செய்த சப் - இன்ஸ்பெக்டர். இந்த சப் - இன்ஸ்பெக்டரை தண்டிக்க முடியவில்லை, இடமாற்றம் கூட செய்ய முடிய வில்லை
பின்னர் வழக்கம் போல விசாரணை கமிஷன் என்ற கண்துடைப்பு நாடகம் நடைபெற்றது.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு விசாரணையை நடத்தினார். அரசியல்வாதிகள் யார், யார் அந்த இனப்படுகொலைகளுக்குக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். அரசு அதிகாரிகள் யார்? யார் இனப்படுகொலைகளைச் செய்தார்கள் என்பதைக் குறிப்பிட்டார்.
ஆனால் நடந்தது வேறு : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையில் பிரதான குற்றவாளியாகக் காட்டப்பட்ட பால் தாக்கரேயின் கட்சி ஆட்சிக்கு வந்தது. பல அதிகாரிகள் ஓய்வு பெற்றார்கள். மீதமிருந்தோர் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, பதவி உயர்வைப் பெற்றார்கள்.
2002 குஜராத் இனப்படுகொலையின் தளகர்த்தனாக இருந்த மோடி இரண்டு முறை முதலமைச்சரானார். அந்த இனப்படுகொலைகளின்போது, நியாயமாக அதிகாரிகள் (ஸ்ரீகுமார்) போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டது. இன்னும் 'சஞ்சய்பாட்' போன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இனப்படுகொலைகளுக்க உதவியாக இருந்த அதிகாரிளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
தடுப்புச்சட்டம் 2005
இப்படி வகுப்பு கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் உதவிகளைச் செய்வோர் ஆட்சிளையும் பதவி உயர்வையும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில்தான் இவர்களைத் தண்டிக்கும் வழிமுறைகளைக் காண மனித உரிமையாளர்கள் ஒரு சட்டம் வேண்டும் என்றதொரு கோஷத்தை முன்வைத்தார்கள். இந்த கோஷங்கள் 2005 முதலே எழுப்பப்பட்டன. காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களை காப்பாற்றாவிட்டாலும், ஏமாற்றவது கடமை என நினைத்தது. தனது ஆகவே அப்படியரு சட்டத்தை யாத்திடும் வழிமுறைகளை மேற்கொண்டது.
இதற்கான பொறுப்பை தேசிய ஆலோசனை குழுவிடம் ஒப்படைத்தது. இந்த தேசிய ஆலோசனை குழு மிகவும் முக்கியமானதொரு அமைப்பு. நாட்டை ஆளும் அமைப்பு எனச் சொன்னால் அது மிகையாகாது. இதனால்தான் இதன் தலைவராக சோனியா காந்தி அவர்கள் இருக்கின்றார்கள்..
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான இந்த தேசிய ஆலோசனை குழு, ஒரு சட்டத்தை வரைந்தது.
இந்தச் சட்டத்தின் நோக்கம் இனப்படுகொலைகளை - வகுப்புவாத கொலைகளைச் செய்கின்றபோது அதைத் தடுக்கத் தவறிய, ஆட்சியாளர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்பு கலவரங்களை நடத்துவதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் (சங்கப்பரிவாரம்) போன்ற கும்பல்களைத் தடுக்க தவறிய அதிகாரிகளைத் தண்டிக்கவேண்டும்.
வகுப்புக் கலவரங்கள் நடக்கின்றபோது தடுக்கத்தவறும் அதிகாரிகள், அதற்கு உதவிகளைச் செய்ய முன்வரும் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினர், இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
கற்பழிக்கப்படும் பெண்கள், அவமானப் படுத்தப்படும் பெண்கள், இவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவேண்டும்.
வகுப்புக் குரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது - அல்லது வெளியேறுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது. இதற்கு காரணமானவர்களைத் தண்டிப்பது.
நம்மைப் பொறுத்தவரை சங்கப்பரிவார அமைப்புகளை முழுமையாகத் தடை செய்யாத வரை வகுப்புக்கலவரங்களை தடுத்து நிறுத்திட இயலாது.
வகுப்புக் கலவரங்களை நிகழ்த்தினால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தரை மட்டமாக்கினால், தேர்தலில் வென்று, பதவிகளைப் பெறலாம் என்றாகிவிட்ட நிலையில், முழுமையான தடையை அரசு ஆலோசிக்கத் தயங்குகிறது.
இந்தச் சட்டம் வந்தால் எல்லாம் நடந்துவிடும் வகுப்பு கலவரம் குறைந்துவிடும் என்பது கனவுதான்.
இந்தச் சட்டவரைவில் சொல்லப்படும் பல குற்றங்கள் எற்கனவே நமது இந்திய தண்டனைச் சட்டத்தில் இருப்பவைதான். ஆனால் அவை செயல் படுத்தப்படுவதில்லை.
வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்பவர்களை தடுக்க, சமூகங்களுக்கிடையேயுள்ள நல்லுறவை கெடுக்க முனைபவர்களை, தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 இருக்கின்றது. ஆனால் இஃது அப்பாவித்தனமாகக் குழுமும் முஸ்லிம்களை கேள்விக்கணக்கில்லாமல் தடுப்புக் காவலில் வைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
சட்டத்தின் சிறப்பு :
மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டம் கடமை தவறும் அதிகாரிகளைத் தண்டிக்க வகைசெய்கின்றது எனக் கூறுகின்றார்கள். வகுப்புக் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டால். அவை நீண்ட நாள்களாக நீடித்தால், அந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகள், தங்கள் கடமைகளில் தவறிவிட்டார்கள் எனக்கருதப்படும் என்றொரு பிரிவு இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கடமை தவறுவோரை தண்டிப்பதற்கு நமது இந்திய தண்டனை சட்டத்தில் வழி இருந்தாலும் இந்தப்பகுதி சற்று விசாலமானது என்கின்றார்கள், மனித உரிமை ஆர்வலர்கள்.
நடப்பிலிருக்கும் சட்டங்கள் வகுப்புக் கலவரத்திற்கான முன்னேற்பாடுகளைத் தடுக்கத் தவறியதை கடமை தவறிய குற்றமாக ஏற்பதில்லை மாறாக கலவரம் நடந்தபின்பு வரும் நிகழ்வுகளில் கடமை தவறுபவர்களையே தண்டிக்க வகை செய்கின்றது.
சட்டத்தின் இந்தப் பிரிவுகள், நிச்சயமாக அதிகாரிகள் வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோவதை, உதவி செய்வதை நிச்சயமாகத் தடுக்கும் என்கின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
சட்டத்தின் செயல்பாடுகள்:
இந்தச் சட்டத்தின் படி, தேசிய அளவில் ஓர் முகவாண்மை ஏற்பாடு செய்யப்படும். அதன் பெயர், தேசிய வகுப்பு நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீட்டு ஆணையம்.
இந்த ஆணையம் தான் இந்தச் சட்டத்தை அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும்.
இதன் தலைவராக மத்தியில் பிரதமர் இருப்பார். மாநில அளவில் இதுபோன்ற ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அதன் தலைவராக மாநில முதலமைச்சர் இருப்பார்.
மாநில அமைப்பில் இந்த ஆணையத்தை ஏற்படுத்துவதன் நோக்கம், மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரச தலையிட்டு விடக்கூடாது என்பதே!
ஏனெனில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவது என்பது, மாநில அரசின் கடமை, உரிமை. இச்சட்டம் மாநில அரசின் உரிமைகளில் தலை இடுகிறது என குஜராத் முதல்வர் மோடியும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்த்தார்கள். ஆகவே இந்த ஆணையம், மாநில அமைப்புகளை ஏற்படுத்திற்று. இதையும் பலர் எதிர்த்தார்கள். ஆனால் மத்திய அரசு விட்டுத் தந்திடவில்லை.
தேசிய சமய நல்லிணக்க ஆணையம் சட்டத்தின் செயல்பாடு
சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்கப் போகின்றோம், என மார்தட்டி வந்த இந்தச் சட்டம் இந்திய தேசிய மத நல்லிணக்க ஆணையம் என்ற அளவில் சுருங்கிக் கொண்டது.
என்ன அதிகாரம்?
மொத்தச் சட்டத்தையும் செயல்படுத்துகின்ற பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுத் தந்திடுவதும் இந்த ஆணையத்தின் பொறுப்பு இந்தச் சட்டத்தின் அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தின் சொல்லாட்சியில் நிவாரணங்களுக்குப் பெயர் இழப்பீடுகள். இழப்பீடுகள் உரியவர்களுக்குச் சென்று சேருகின்றனவா? என்பதைக் கண்காணிக்கின்ற பொறுப்பும் இந்த ஆணையத்திற்கு உண்டு.
ஆணையத்தின் அதிகாரம்?
இப்படி எல்லாப் பொறுப்புகளையும் ஒன்றாய் சுமக்கும் இந்த ஆணையத்தின் அதிகாரம் என்ன?
இந்த ஆணையம் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். இந்த ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்கமறுத்து விட்டால், இந்த ஆணையம் நீதிமன்றங்களை அணுகலாம் என்று கூறுகின்றது.
அரசுகள் ஏற்கமாட்டா என்பதை நாமறிவோம். நரேந்திர மோடிகள் முதலமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது? 'வாஜ்பேயி' போன்றவர்கள் பிரதம அமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது?
2002 இனப்படுகொலைகளின்போது 'வாஜ்பேயி' குஜராத் நமது சோதனை கூடம் இதனை நாம் இந்தியா முழுவதும் கொண்டு சென்றிட வேண்டும் எனப் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்தச் சட்டம் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாகப் பயன்படுத்துகின்ற அளவில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
நேரடியாகவே அவர்கள் அத்தனை அதிகாரங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட தேவையானால் முதலமைச்சர் மீதும், வாஜ்பேயி போன்றவர்கள், பிரதம அமைச்சரானால் அவர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கூப்பாடு நம் நாட்டைப் பொறுத்தவரை ஏட்டுச் சுரைக்காய்தான். அவை நாட்டு நடப்பாக ஆகாதவரை எந்தச் சட்டமும் எந்த நிவாரணத்தையும் தந்திட முடியாது
நீதி மன்றங்கள்...?
நீதி மன்றங்கள், இந்தியாவில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அநீதி மன்றங்களாகி வெகுநாள்களாகி விட்டன. ஷைத்தானும் குரங்குகளும் நீதிமன்ற தீர்ப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அப்பாவி சிறுபான்மை சமுதாயத்தவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்திடும் கோரம், அதுவும் எந்த ஆதாரமுமில்லாமல் சிறையில் வைத்திடும் அவலம் இந்தியாவில் தான் மிகவும் அதிகம். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சிறையில் வைத்தபின், அவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்துத்தீவிரவாதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.
அதேபோல் நீதிபதிகளை தண்டிக்கவும் வேண்டும். இல்லையேல் எந்தச் சட்டமும் சிறுபான்மையினர் மீது ஏவிவிடப்படும் எந்தத் தாக்குதலிலிருந்தும் இச்சட்டங்கள் அவர்களைக் காப்பாற்றிடாது. சிறுபான்மையினருக்கு நீதிமன்றங்கள் வழி என்ன கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், ராஜீவ்தாவான் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
“சிறுபான்மையினருக்கு (நமது நீதி மன்றங்களில்) நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல, அவர்கள் நீதியின் பெயரால், கொடுமைப்படுத்தப்படுவார்கள்.”
ராஜீவ்தாவான் அவர்களின் சொற்கள் எந்த அளவுக்கு நம் நாட்டின் நிதர்சனம் என்பதை, உணர்ந்திட பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதி மன்றம் வரை வழங்கிய தீர்ப்புகளிலிருந்து தெரிந்திடலாம்.
அதேபோல், குண்டு வெடிப்பு விவகாரங்களில், அப்பாவி முஸ்லிம்களை சிறையில் வைத்திட நீதிமன்றங்கள் எந்தத் தயக்கத்தையும் காட்டுவதில்லை.
அதே நேரத்தில் உண்மையிலேயே அந்த குண்டு வெடிப்புகளில், கைதாகும், இந்துத் தீவிரவாதிகளுக்கு உடனேயே பிணைகளை வழங்கிவிடுகின்றது. ஆக நீதிமன்றங்களின் பார்வையும் போக்கும் மாறிடாதவரை எந்தச் சட்டத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பைப் பெற்றிட மாட்டார்கள்.
வகுப்புவாத வன்முறைத் தடுப்புச்சட்டத்தின் இப்போதைய நிலை....?
இந்தச் சட்டத்தைத் தயாரித்தது என்,ஏ,சி என்ற தேசிய ஆலோசனை குழு, அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள். இந்தச் சட்ட வரைவு இதுவரை அமைச்சரையின் ஒப்புதலுக்குக் கூட வைக்கப்படவில்லை காரணம், இதற்கு இந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து மட்டுமல்ல, முஸ்லிம்களின் நண்பர்களைப் போல்காட்டிக் கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பும் தான்.
அமைச்சரவையின், ஒப்புதலுக்குப்பின், இது நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் வென்றபின் இந்தச் சட்டம் தேர்வுகுழுக்களில் (sறீமீநீt நீஷீனீனீவீறீறீநீமீ) விவாதிக்கப்படும் பின்னர் மேலவையில் விவாதிக்கப்படும் பின்னர் இந்தச் சட்டம், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் இத்தனையையும் இது கடக்கும் என எதிர்ப்பார்பதற்கில்லை.
இரண்டு சட்டவரைவுகள்
இந்தச் சட்டத்தின் முதல்வரைவு சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழு வரைந்தது.
இந்த வரைவில் எது வகுப்புவாத வன்முறை என்பதை வரையறுப்பதில் பல குளறுபடிகள்.
இதனால் மனித உரிமை அமைப்புகள், ஓர் சட்டவரைவை முன் வைத்தன. அது ஹர்ஷ் மந்திர் அவர்களின் தலைமயில் அமைந்த குழு. இந்தக் குழு வரைந்த சட்டம் செயலுக்கு வந்தால் நாம் எதிர்ப்பார்ப்பதைப் போல் பல நேரடி நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் வரவாய்ப்பில்லை என்றே படுகின்றது.
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான குழுவின் சட்டவரைவே இன்னும் அமைச்சரவையை எட்டிப்பார்க்காத நிலையில் ஹர்ஷ் மந்திர் தலைமையிலானவர்கள் எழுதிய சட்ட வரைவு எந்த அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை.
தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம்.
இந்த வருடம் 2011 செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் நமது தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தச் சட்ட வரைவு பற்றிய ஒரு விவாதமே முழுமையாக நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்றவர்கள் எல்லா நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு சட்டத்தை எதிர்த்தார்கள் இதனை ஆதரித்து அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மௌனம் சாதித்தார்கள் இதனால் இந்தச் சட்டம் கிடப்பில் போடப்படும் நிலையே அதிகம் என்றானது.
இல்லையேல் நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடரில் இச்சட்டம் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும்.அண்ணாஹஸாரேயும் வகுப்புவாத வன்முறை சட்டமும்.
அண்ணா ஹஸாரே-இன் வாழ்க்கையும் இப்போதைய சமூக நடவடிக்கைகளும் இந்துத்துவாவில் தேய்த்து எடுக்கப்பட்டதாகவே அமைந்திருக்கின்றது.
அவருடைய அனைத்து நடவடிக்கைகளும் இந்துத்துவ கட்சியாகிய பாரதீய ஜனதா கட்சிக்கும், இந்துத்தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.
சமூக ஆர்வலர்கள் இந்தியாவை மூன்று 'C'கள் பீடித்திருக்கின்றன அவை Castism, Communalism, Corruption அதாவது ஜாதியம், வகுப்புவாதம், லஞ்சம் என்பவைதான் இந்தியாவின் தீர்க்க முடியாத நோய் என்பார்கள். அதில் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஜாதியத்தில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர் அண்ணாஹஸாரே! அடுத்து ஒழிக்கப்பட வேண்டிய வகுப்பு வாதத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டவர் செயல்படுபவர். எந்த அளவுக்கு என்றால் மோடியையே புகழும் அளவுக்குப் போய் விட்டார். அதன்பின் மக்கள் தந்த அழுத்தங்களால்தான் அதனை பின்வாங்கினார்
'லஞ்சத்தை' கையிலெடுத்துக் கொண்டார் மற்ற இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் மக்கள் கருத்தையும் கவனத்தையும் திசை திருப்பிவிட்டார் மீடியாக்களின் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதனால் இந்த சட்டத்தையும் - வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தையும் மக்கள் கவனத்திலிருந்து மறைத்துவிட்டார். மக்கள் மத்தியில் ஓர் விவாதமாகாமல் போய்விட்டது.
இந்த வகையிலும் அவர் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஓர் செஞ்சோற்றுக் கடனையே ஆற்றி இருக்கின்றார்.
சுப்பிரமணியசாமி முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் கட்டுரையை எழுதி நான்தான் மிகப்பெரிய இந்துத்துவாதி எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இப்போது இந்த வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்திலும் தனது மூக்கை நுழைத்திருக்கின்றார்.
இந்தச் சட்டத்தை வரைந்ததன் மூலம் சோனியா காந்தி இந்துக்களுக்குத் தீராத துரோகத்தைச் செய்துவிட்டார் எனக் கூறி அவர் மீது ஓர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கின்றார் டெல்லியில்.
தாருல் இஸ்லாம் வைகறை வாசகர் வட்டம்.
சோனியா காந்தி தலைமையிலான குழுவரைந்த சட்டம், ஜீலை 4 ஆம் நாள்வரை மக்களின் கருத்துக்காக இணையதளத்தில் வைக்கப்பட்டிருந்தது நாம் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டி இருப்பவற்றை அதில் நமது கருத்தாகத் தெரிவித்தோம்.
ஆனால் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தினோம், காரணம் சங்கப்பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை ஓரளவுக்கு குறைக்கவாவது இந்தச் சட்டம் பயன்படும்.
கிருஸ்தவ அமைப்புகள்
அத்தோடு கிருஸ்தவ அமைப்புகள் இந்தச் சட்டமே வரவேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் ஜான் டயான் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் அழுத்தமாகப் பேசினார். மற்றொரு சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கிருஸ்தவர்களோடு, தோளோடு தோளாக நிற்கவிரும்பினோம். ஆகவே இந்தச் சட்டத்தை ஆதரித்தோம்.
கிருஸ்தவ அமைப்புகள் 57 திருத்தங்களை இந்தச் சட்டத்தில் கொண்டு வந்தார்கள் அவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தச் சட்டத்தைப் பார்த்து இந்துத்துவவாதிகள் பதறுகின்றார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் சிறுபான்மையினர் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்திட இயலாது. சுருங்கச் சொன்னால் அவர்கள் இயங்கிட முடியாது
நன்றி: கீற்று
Sunday, November 13, 2011
ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்
இந்திய, இலங்கை இனவெறி அரசுகளால் தங்கள் இன்னுயிரையும் மண்ணுயிரையும் இழந்த எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் தமிழகத்தின் முக்கிய அரசியல் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைத்து கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் நடாத்திய மாபெரும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1. வீரவணக்கம்:
•இனப்படுகொலைப் போருக்குப் பலியான இலட்சக்கணக்கான தமிழ் உறவுகள்.
•ஈழப்போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான போராளிகள்.
•முத்துக்குமார் முதல் செங்கொடி வரை உயிர் ஆயுதம் ஏந்தி தமிழர் உரிமைக்காக தம் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனைத்துத் தியாக உறவுகளையும் நினைவில் ஏந்தி இம்மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.
2. வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தாயகமாய்க் கொண்ட தமிழ் மக்கள், தமிழீழத் தமிழ் அரசே தீர்வு என்பதை 1972ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் உறுதிப்படுத்தினர். மேலும் 1977இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாய் வாக்களித்து ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, தொடர்ந்து தமது போராட்டங்கள் மூலம் அதை உறுதி செய்துள்ளார்கள். எனவே அய்.நா. மன்றமே! கிழக்கு தைமூர், கொசாவா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழரின் தாயகப் பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்திட ஆவன செய்!.
3. ”இனப்படுகொலைப் போர்க் குற்றவாளியான ராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும், சிங்கள இனவெறி இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.” என தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது இந்திய அரசே நடவடிக்கை எடு!
4. போர்க் குற்றங்கள் இழைத்துள்ள இலங்கையில் எதிர்வரும் 2013ல் காமன்வெல்த் நாடுகள் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாகக் கனடா நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளதை இம்மாநாடு வரவேற்றுப் பாராட்டுகிறது. அதேபோல் இந்தியா உட்பட அனைத்து காமன்வெல்த் நாடுகளும் உச்சி மாநாட்டிற்கான இடத்தை இலங்கையில் இருந்து மாற்றக் கோரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
5. இராசீவ் கொலை வழக்கில் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக்கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள மரணதண்டனை தொடர்பான சட்டங்களில் இந்திய குடியரசுத் தலைவருக்கு இணையான அதிகாரத்தைக் கொண்ட ஆளுநரும், மாநில அரசும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குதண்டனையை உடனடியாக நீக்கம் செய்திட தமிழக அரசே நடவடிக்கை எடு!.
6. சர்வதேச சமூகமே! தமிழீழப் பகுதிகளில் விரிவாகவும், செறிவாகவும், மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்து!
7. இந்திய அரசே, ஈழ மக்கள் அங்கீகரித்த தனி ஈழ அரசு அமைக்கப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.
8. இந்திய அரசே! இலங்கைச் சிறைகளில் விசாரணை ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை நிபந்தனையின்றி சிங்கள அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடு!
9. அய்.நா மன்றமே! தமிழீழப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் உடனடியாக மேற்கொள்!
10. இந்திய அரசே! தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழீழ அகதிகளுக்கு பன்னாட்டு அகதிகள் சட்டப்படி உரிமைகள் வழங்கி மனித நேயத்தோடு நடத்து!
11. இந்திய அரசே! மலையகத் தமிழர்களுக்கு இருப்பிடம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்திட இலங்கை அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்திடு!.
12. இந்திய அரசே! மனிதகுலப் பண்பாட்டிற்கும், மனித உரிமைகளுக்கும், எதிரான மரணதண்டனையை உலகில் 137 நாடுகள் ஒழித்துக்கட்டியது போல் சட்டத்திலிருந்து நீக்கு!
13. தமிழக அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குதண்டனைகுறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுக!
14. ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்துப் பரப்புரை செய்திட அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
15. தமிழக அரசே! தமிழகச் சிறைகளில் வாடும் மரணதண்டனைக் கைதிகள் உட்பட நீண்ட காலம் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!
16. இந்திய அரசே! தமிழக மீனவர்களைப் படுகொலை செய்தும், மனித மாண்புகளுக்கு எதிராக நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தும், வலைகளை அறுத்தெரிந்தும், வாழ்வாதாரங்களை அழித்தும், இந்திய இறையாண்மையை அவமானப்படுத்துகிற சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடு!
17. இந்திய அரசே! தமிழக மீனவர்களின் மரபார்ந்த மீன்பிடி உரிமைக்கு எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்று!
18. இந்திய அரசே! தமிழக மக்களுக்குப் பேரழிவை உண்டாக்கக் கூடிய கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை இழுத்து மூடு! மின் உற்பத்திக்கான மரபுசார் ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்த உரிய திட்டங்களைச் செயல்படுத்துக!
19. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் சமரசமின்றிப் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு இம்மாநாடு முழு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
20. பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தமிழக்க் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. படுகொலைக்குக் காரணமான ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட காவல்துறை அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
கண. குறிஞ்சி
தமிழக ஒருங்கிணைப்பாளர்
9553307681
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம், தமிழ்நாடு
20/33 திருவள்ளுவர் நகர், ராம்நாதபுரம், கோவை: 641045.
மின்ன்ஞ்சல்: eezhamanaadu@gmail.com; வலைத் தளம்: kovaimaanaaduNOV6.blogspot.com
தொடர்புக்கு: 9553307681,9443039630,94444204740,96555587892
1. வீரவணக்கம்:
•இனப்படுகொலைப் போருக்குப் பலியான இலட்சக்கணக்கான தமிழ் உறவுகள்.
•ஈழப்போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான போராளிகள்.
•முத்துக்குமார் முதல் செங்கொடி வரை உயிர் ஆயுதம் ஏந்தி தமிழர் உரிமைக்காக தம் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனைத்துத் தியாக உறவுகளையும் நினைவில் ஏந்தி இம்மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.
2. வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தாயகமாய்க் கொண்ட தமிழ் மக்கள், தமிழீழத் தமிழ் அரசே தீர்வு என்பதை 1972ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் உறுதிப்படுத்தினர். மேலும் 1977இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாய் வாக்களித்து ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, தொடர்ந்து தமது போராட்டங்கள் மூலம் அதை உறுதி செய்துள்ளார்கள். எனவே அய்.நா. மன்றமே! கிழக்கு தைமூர், கொசாவா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழரின் தாயகப் பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்திட ஆவன செய்!.
3. ”இனப்படுகொலைப் போர்க் குற்றவாளியான ராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும், சிங்கள இனவெறி இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.” என தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது இந்திய அரசே நடவடிக்கை எடு!
4. போர்க் குற்றங்கள் இழைத்துள்ள இலங்கையில் எதிர்வரும் 2013ல் காமன்வெல்த் நாடுகள் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாகக் கனடா நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளதை இம்மாநாடு வரவேற்றுப் பாராட்டுகிறது. அதேபோல் இந்தியா உட்பட அனைத்து காமன்வெல்த் நாடுகளும் உச்சி மாநாட்டிற்கான இடத்தை இலங்கையில் இருந்து மாற்றக் கோரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
5. இராசீவ் கொலை வழக்கில் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக்கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள மரணதண்டனை தொடர்பான சட்டங்களில் இந்திய குடியரசுத் தலைவருக்கு இணையான அதிகாரத்தைக் கொண்ட ஆளுநரும், மாநில அரசும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குதண்டனையை உடனடியாக நீக்கம் செய்திட தமிழக அரசே நடவடிக்கை எடு!.
6. சர்வதேச சமூகமே! தமிழீழப் பகுதிகளில் விரிவாகவும், செறிவாகவும், மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்து!
7. இந்திய அரசே, ஈழ மக்கள் அங்கீகரித்த தனி ஈழ அரசு அமைக்கப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.
8. இந்திய அரசே! இலங்கைச் சிறைகளில் விசாரணை ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை நிபந்தனையின்றி சிங்கள அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடு!
9. அய்.நா மன்றமே! தமிழீழப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் உடனடியாக மேற்கொள்!
10. இந்திய அரசே! தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழீழ அகதிகளுக்கு பன்னாட்டு அகதிகள் சட்டப்படி உரிமைகள் வழங்கி மனித நேயத்தோடு நடத்து!
11. இந்திய அரசே! மலையகத் தமிழர்களுக்கு இருப்பிடம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்திட இலங்கை அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்திடு!.
12. இந்திய அரசே! மனிதகுலப் பண்பாட்டிற்கும், மனித உரிமைகளுக்கும், எதிரான மரணதண்டனையை உலகில் 137 நாடுகள் ஒழித்துக்கட்டியது போல் சட்டத்திலிருந்து நீக்கு!
13. தமிழக அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குதண்டனைகுறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுக!
14. ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்துப் பரப்புரை செய்திட அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
15. தமிழக அரசே! தமிழகச் சிறைகளில் வாடும் மரணதண்டனைக் கைதிகள் உட்பட நீண்ட காலம் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!
16. இந்திய அரசே! தமிழக மீனவர்களைப் படுகொலை செய்தும், மனித மாண்புகளுக்கு எதிராக நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தும், வலைகளை அறுத்தெரிந்தும், வாழ்வாதாரங்களை அழித்தும், இந்திய இறையாண்மையை அவமானப்படுத்துகிற சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடு!
17. இந்திய அரசே! தமிழக மீனவர்களின் மரபார்ந்த மீன்பிடி உரிமைக்கு எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்று!
18. இந்திய அரசே! தமிழக மக்களுக்குப் பேரழிவை உண்டாக்கக் கூடிய கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை இழுத்து மூடு! மின் உற்பத்திக்கான மரபுசார் ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்த உரிய திட்டங்களைச் செயல்படுத்துக!
19. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் சமரசமின்றிப் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு இம்மாநாடு முழு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
20. பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தமிழக்க் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. படுகொலைக்குக் காரணமான ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட காவல்துறை அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
கண. குறிஞ்சி
தமிழக ஒருங்கிணைப்பாளர்
9553307681
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம், தமிழ்நாடு
20/33 திருவள்ளுவர் நகர், ராம்நாதபுரம், கோவை: 641045.
மின்ன்ஞ்சல்: eezhamanaadu@gmail.com; வலைத் தளம்: kovaimaanaaduNOV6.blogspot.com
தொடர்புக்கு: 9553307681,9443039630,94444204740,96555587892
Wednesday, November 09, 2011
சங்கப் புலவர் அகரவரிசை
சங்க இலக்கியம் குறித்த பல நுண்ணாய்வுச் செய்திகளை இவ்வலைப்பகுதி தருகிறது.
இதுவரை வேறு தளங்களில் இல்லாத பல செய்திகளும் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோர் பயன்பெறுவதற்காக இம்முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது.எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை.அதனால் இங்கே இப்பெயர்களை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது.
பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும்.
சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு,வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.
இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.
சங்கப் புலவர் அகரவரிசை
1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார்
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார்
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்
நன்றி:வேர்களை தேடி மற்றும் விருதை பாரி
இதுவரை வேறு தளங்களில் இல்லாத பல செய்திகளும் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோர் பயன்பெறுவதற்காக இம்முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது.எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை.அதனால் இங்கே இப்பெயர்களை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது.
பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும்.
சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு,வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.
இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.
சங்கப் புலவர் அகரவரிசை
1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
8) அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார்
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார்
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்பற்றுக் குமரன்
நன்றி:வேர்களை தேடி மற்றும் விருதை பாரி
Wednesday, October 26, 2011
கூடங்குளம் தமிழரின் எதிர்கால கல்லறை
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அவசியம் குறித்தும் அதில் அபாயம் இல்லை என்றும் நிறைய விஞ்ஞானிகள் அதாவது முதலாளிதுவத்தின் அடியாட்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்லவே முன்னதாக பசுமை புரட்சி,பிடிகத்திரிக்காய் தொடங்கி நமக்கெல்லாம் பற்பல சமுதாய சீர்கேடுகளை பற்றி விளாவாரியாக புரியவைத்தவர்கள்தானே.
விஞ்ஞானிகள் நன்கு படித்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும், முதலாளிதுவத்துக்கும் எப்படி அடிவருடிகளாக நடந்துக்கொள்வது என்று நன்கு கற்று தேர்ந்தவர்கள். அதே கலையை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுவது எப்படி என்பதையும் நன்கு அறிவார்கள்.விஞ்ஞானிகள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை அவர்களும் நம்மைபோன்றவர்களே என்ன ஒரு வேறுபாடு அவர்கள் புளித்த ஏப்பகாரர்கள்!நாம் அத்த பசிக்காரர்கள் அவ்வளவுதான்.
இவர்களைவிட மிகுந்த அறிவார்ந்த விஞ்ஞானிகளை கொண்டதும், இதுவரை உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொடுத்ததுமான ஜெர்மன் நாடு அணு உலைகள் ஆபத்தானவை என்று முடிவெடுத்து தங்களது அணு உலைகளை 2022ம் ஆண்டுக்குள் மூடிவிடுவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் தொடங்கியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளும் அணு உலைகளை மூடிவிடத் திட்டமிட்டுள்ளன. புகுஷிமா விபத்திற்கு பிறகு தங்கள் நாட்டில் கட்டப்பட்டுவரும் அணு உலைகளை ஜப்பான் நிறுத்திவிட்டதோடல்லாமல், முன்னதாக இயங்கிக்கொண்டிருந்த 28 அணு உலைகளையும் மூடிவிட்டார்கள்.
மின்னனுவியலிலும், அணுவியலிலும் கைதேர்ந்த ஜப்பானுக்கே அணு உலைகள் குறித்து பீதி கிளம்ப, தங்களால் அணு உலைகளை சரிவர பராமரிக்க இயலாது என்றும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள் அணு உலைகளையும் பாதிக்கும் என்பதையும் வெட்கம் விட்டு ஒப்புக்கொண்டு தங்களது அணு உலைகளை மூடிகொண்டிருக்கும் தருவாயில் ஒரு மின்கலத்தையே சரியாக பராமரிக்க தெரியாமல் வெய்யில் காலங்களில் வெடிக்கவைத்து நகரங்களை இருளில் முழ்கடிக்கும் நம் கைதேர்ந்த விஞ்ஞானிகள்தான் இன்று கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை (அவர்களுக்கு இல்லைதான் அவர்கள் எல்லாம் வெளிநாட்டிக்கு குடிபெயரப் போரவர்கள்தானே) என்று நமக்கு தெளிவாக விளங்கும்வரை பாடம் நடத்த போகிறார்களாம்.
அணு உலைகுறித்த வாக்கெடுப்பில் உலகமக்கள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்புகளையும், அமைக்கவேண்டாம் என்கிற கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவுசெய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாக இந்த விஞ்ஞானிகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அறிவாலிகள்.
மேற்கு வங்களத்தில் ஹரிப்பூர் என்ற இடத்தில் ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட இருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்துவிட்டார் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. 'மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலை இனி அமையாது’ என்றும் அறிவித்து விட்டார்.
ஆனால் கூடங்குளத்தில் அமைக்க இருக்கும் அணு மின் நிலையத்திலிருந்து கேரளா, கருநாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவே திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்கு மின்சாரம் தரக்கூடிய அணு உலையினை கேரள மக்களே வேண்டாம் இங்கே அமைக்கக்கூடாது என்று அடித்துவிரட்டியதும் அது தமிழநாட்டில் நிறுவப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல கேரளாவில் இனி அணு உலை அமைக்க விடமாட்டோம் என்று அறிவித்தும் விட்டார்கள்.
தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்றும், அவர்களின் முதலமைச்சர்கள் காசுக்காக இனத்தைவிற்பவர்கள் என்றும் டெல்லி கட்சிகளின் கூட்டிகொடுக்கும் மாமாக்கள் நிறைந்த இடம் என்றும் நன்கு அறிந்தவர்கள் வெளிநாட்டு பெரு முதலாளிகள். கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு உலையில் மின்சாரம் மட்டுமின்றி எதிர்காலத்தில் சல்பேட்,அமோனியா போன்ற மனிதனுக்கு அழிவையும், உடல், மனரீதியான பலவீனத்தினை தரக்கூடிய இரசாயனங்களை தயாரிக்க உள்திட்டம் இருப்பதாகவும் மக்கள் அஞ்சுவது நியாயமானதே.
முன்னதாக இந்திய அளவில் நாம் போபாலில் இழந்த மனித உயிர்கள் ஆயிரகணக்கில், உடல் மற்றும் மன உலைச்சலுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இன்னும் தமிழக அளவில் சிப்காட் அதைசுற்றி வாழும் மக்களை புற்றுநோய் தொடங்கி கண்ணுக்கு தெரிந்த, தெரியாத நோய்களையும் பரப்பிவந்தாலும் அதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கும் துறைமுகத்தில் உள் தயாரிப்பாக "சல்பேட்" தயாரித்து அனுப்புவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருப்பதும் அவர்களை சமாதான படுத்துவதற்காக உள்ளூர்காரர்களுக்கு வேலைதருவதாக சொல்லும் பொய்யை நம்பாததும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
முத்தாய்ப்பாக இன்று தீபாவளி இல்லையா இதுவே உதாரணம் அணு உலை அமைத்து ஏதாவதொரு தினத்தில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க இப்பவே அடிக்கல் நாட்டுவிழா வேலைகள் நடக்கிறது என்றால் மிகையில்லை. இந்தியாவை பொருத்தவரை தமிழர்கள் அனைவரும் நரகாசூரர்களே.
கீற்றுவில் என் வெளியான கட்டுரை.
விஞ்ஞானிகள் நன்கு படித்தவர்கள் அரசியல்வாதிகளுக்கும், முதலாளிதுவத்துக்கும் எப்படி அடிவருடிகளாக நடந்துக்கொள்வது என்று நன்கு கற்று தேர்ந்தவர்கள். அதே கலையை பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றுவது எப்படி என்பதையும் நன்கு அறிவார்கள்.விஞ்ஞானிகள் ஒன்றும் வானத்திலிருந்து குதிக்கவில்லை அவர்களும் நம்மைபோன்றவர்களே என்ன ஒரு வேறுபாடு அவர்கள் புளித்த ஏப்பகாரர்கள்!நாம் அத்த பசிக்காரர்கள் அவ்வளவுதான்.
இவர்களைவிட மிகுந்த அறிவார்ந்த விஞ்ஞானிகளை கொண்டதும், இதுவரை உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகளை கொடுத்ததுமான ஜெர்மன் நாடு அணு உலைகள் ஆபத்தானவை என்று முடிவெடுத்து தங்களது அணு உலைகளை 2022ம் ஆண்டுக்குள் மூடிவிடுவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் தொடங்கியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளும் அணு உலைகளை மூடிவிடத் திட்டமிட்டுள்ளன. புகுஷிமா விபத்திற்கு பிறகு தங்கள் நாட்டில் கட்டப்பட்டுவரும் அணு உலைகளை ஜப்பான் நிறுத்திவிட்டதோடல்லாமல், முன்னதாக இயங்கிக்கொண்டிருந்த 28 அணு உலைகளையும் மூடிவிட்டார்கள்.
மின்னனுவியலிலும், அணுவியலிலும் கைதேர்ந்த ஜப்பானுக்கே அணு உலைகள் குறித்து பீதி கிளம்ப, தங்களால் அணு உலைகளை சரிவர பராமரிக்க இயலாது என்றும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள் அணு உலைகளையும் பாதிக்கும் என்பதையும் வெட்கம் விட்டு ஒப்புக்கொண்டு தங்களது அணு உலைகளை மூடிகொண்டிருக்கும் தருவாயில் ஒரு மின்கலத்தையே சரியாக பராமரிக்க தெரியாமல் வெய்யில் காலங்களில் வெடிக்கவைத்து நகரங்களை இருளில் முழ்கடிக்கும் நம் கைதேர்ந்த விஞ்ஞானிகள்தான் இன்று கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை (அவர்களுக்கு இல்லைதான் அவர்கள் எல்லாம் வெளிநாட்டிக்கு குடிபெயரப் போரவர்கள்தானே) என்று நமக்கு தெளிவாக விளங்கும்வரை பாடம் நடத்த போகிறார்களாம்.
அணு உலைகுறித்த வாக்கெடுப்பில் உலகமக்கள் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்புகளையும், அமைக்கவேண்டாம் என்கிற கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவுசெய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த விடயமாக இந்த விஞ்ஞானிகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அறிவாலிகள்.
மேற்கு வங்களத்தில் ஹரிப்பூர் என்ற இடத்தில் ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட இருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்துவிட்டார் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. 'மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலை இனி அமையாது’ என்றும் அறிவித்து விட்டார்.
ஆனால் கூடங்குளத்தில் அமைக்க இருக்கும் அணு மின் நிலையத்திலிருந்து கேரளா, கருநாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவே திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்கு மின்சாரம் தரக்கூடிய அணு உலையினை கேரள மக்களே வேண்டாம் இங்கே அமைக்கக்கூடாது என்று அடித்துவிரட்டியதும் அது தமிழநாட்டில் நிறுவப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல கேரளாவில் இனி அணு உலை அமைக்க விடமாட்டோம் என்று அறிவித்தும் விட்டார்கள்.
தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்றும், அவர்களின் முதலமைச்சர்கள் காசுக்காக இனத்தைவிற்பவர்கள் என்றும் டெல்லி கட்சிகளின் கூட்டிகொடுக்கும் மாமாக்கள் நிறைந்த இடம் என்றும் நன்கு அறிந்தவர்கள் வெளிநாட்டு பெரு முதலாளிகள். கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு உலையில் மின்சாரம் மட்டுமின்றி எதிர்காலத்தில் சல்பேட்,அமோனியா போன்ற மனிதனுக்கு அழிவையும், உடல், மனரீதியான பலவீனத்தினை தரக்கூடிய இரசாயனங்களை தயாரிக்க உள்திட்டம் இருப்பதாகவும் மக்கள் அஞ்சுவது நியாயமானதே.
முன்னதாக இந்திய அளவில் நாம் போபாலில் இழந்த மனித உயிர்கள் ஆயிரகணக்கில், உடல் மற்றும் மன உலைச்சலுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இன்னும் தமிழக அளவில் சிப்காட் அதைசுற்றி வாழும் மக்களை புற்றுநோய் தொடங்கி கண்ணுக்கு தெரிந்த, தெரியாத நோய்களையும் பரப்பிவந்தாலும் அதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கும் துறைமுகத்தில் உள் தயாரிப்பாக "சல்பேட்" தயாரித்து அனுப்புவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருப்பதும் அவர்களை சமாதான படுத்துவதற்காக உள்ளூர்காரர்களுக்கு வேலைதருவதாக சொல்லும் பொய்யை நம்பாததும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
முத்தாய்ப்பாக இன்று தீபாவளி இல்லையா இதுவே உதாரணம் அணு உலை அமைத்து ஏதாவதொரு தினத்தில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க இப்பவே அடிக்கல் நாட்டுவிழா வேலைகள் நடக்கிறது என்றால் மிகையில்லை. இந்தியாவை பொருத்தவரை தமிழர்கள் அனைவரும் நரகாசூரர்களே.
கீற்றுவில் என் வெளியான கட்டுரை.
Wednesday, September 07, 2011
Friday, August 26, 2011
”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.
பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீடாக தோழர் விடுதலை இராசேந்திரனால்
தொகுக்கப்பெற்ற ”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.
1) கேட்பது உயிர்ப்பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! என்ற தோழர் பேரறிவாளனின் கடிதம்....
2) தமிழக முதல்வருக்கு வி.ஆர். கிருட்டிணய்யரின் கடிதம்...
3)அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு
4)தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ. பாலன்
5)தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள் என்ற தோழர் தமிழச்சி யின் கட்டுரை...
ஆகியவற்றின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது ....
விலை: உரூவா 5 மட்டுமே!
வாங்கிப் படித்துப் பரப்புக!
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர், சென்னை - 600 041
நூல்கள் கிடைக்குமிடம்:
பெரியார் படிப்பகம், பேருந்துநிலையம் அருகில்,
மேட்டூர் அணை - 636 401 அலைப்பேசி: 97863 16155
பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம்,
காந்திபுரம், கோவை - 44 அலைப்பேசி: 98433 23153
பெரியார் படிப்பகம், தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம்,
73/1, இலாயிட்சு சாலை, சென்னை - 600 014.
தொலைபேசி: 044 3022 8213
இராவணன் படிப்பகம், இராதாகிருட்டிணன் நகர்,
அரியாங்குப்பம், புதுச்சேரி - 605 007. அலைப்பேசி: 94430 45614
பெரியார் புத்தக நிலையம், மெக்டனால்டு சாலை,
கண்டோன்மெண்ட், ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் எதிரில்,
திருச்சி - 620 001 அலைப்பேசி: 98655 96940
தொகுக்கப்பெற்ற ”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.
1) கேட்பது உயிர்ப்பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! என்ற தோழர் பேரறிவாளனின் கடிதம்....
2) தமிழக முதல்வருக்கு வி.ஆர். கிருட்டிணய்யரின் கடிதம்...
3)அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு
4)தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ. பாலன்
5)தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள் என்ற தோழர் தமிழச்சி யின் கட்டுரை...
ஆகியவற்றின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது ....
விலை: உரூவா 5 மட்டுமே!
வாங்கிப் படித்துப் பரப்புக!
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர், சென்னை - 600 041
நூல்கள் கிடைக்குமிடம்:
பெரியார் படிப்பகம், பேருந்துநிலையம் அருகில்,
மேட்டூர் அணை - 636 401 அலைப்பேசி: 97863 16155
பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம்,
காந்திபுரம், கோவை - 44 அலைப்பேசி: 98433 23153
பெரியார் படிப்பகம், தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம்,
73/1, இலாயிட்சு சாலை, சென்னை - 600 014.
தொலைபேசி: 044 3022 8213
இராவணன் படிப்பகம், இராதாகிருட்டிணன் நகர்,
அரியாங்குப்பம், புதுச்சேரி - 605 007. அலைப்பேசி: 94430 45614
பெரியார் புத்தக நிலையம், மெக்டனால்டு சாலை,
கண்டோன்மெண்ட், ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் எதிரில்,
திருச்சி - 620 001 அலைப்பேசி: 98655 96940
Friday, August 19, 2011
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
அன்புத் தோழர்களே!
ராஜீவ் கொலை வழக்கில் நீதிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாமும் மரண தண்டனையினை இந்திய அரசியலைமைப்பு சட்டத்திலிருந்து நீக்ககோரியும், நமது தோழர்கள் அனைவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து தண்டனை குறைப்பு செய்யக்கோரியும் வேண்டுகோள்வைத்து சனநாயக முறையில் உள்ளரங்கு நிகழ்வாக நிகழ்த்தி மரணதண்டனைக்கு எதிராக பதிவுகளை
அமீரகத்திலிருந்தும் பதிக்கவேண்டி நாம் ஒர் இடத்தில் கூடுவோம்.
ஆர்வலர்களும், தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்தினால் இவ்விடயத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் வருங்காலத்தில் ஏனைய உயிர்கள் காக்கப்படலாம் என்பது உண்மை.
அமீரகம் தொடர்ந்து அனைத்து வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளரங்கு நிகழ்வுகள் நிகழ்த்தி மரண தண்டனைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி.
ராஜீவ் கொலை வழக்கில் நீதிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாமும் மரண தண்டனையினை இந்திய அரசியலைமைப்பு சட்டத்திலிருந்து நீக்ககோரியும், நமது தோழர்கள் அனைவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து தண்டனை குறைப்பு செய்யக்கோரியும் வேண்டுகோள்வைத்து சனநாயக முறையில் உள்ளரங்கு நிகழ்வாக நிகழ்த்தி மரணதண்டனைக்கு எதிராக பதிவுகளை
அமீரகத்திலிருந்தும் பதிக்கவேண்டி நாம் ஒர் இடத்தில் கூடுவோம்.
ஆர்வலர்களும், தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்தினால் இவ்விடயத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் வருங்காலத்தில் ஏனைய உயிர்கள் காக்கப்படலாம் என்பது உண்மை.
அமீரகம் தொடர்ந்து அனைத்து வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளரங்கு நிகழ்வுகள் நிகழ்த்தி மரண தண்டனைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி.
Thursday, August 18, 2011
ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில்
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவுடன் ஒத்துழைப்பதா? அல்லது அதற்கு எதிர் அரசியல் நடத்துவதா? இல்லை கண்டுக்கொள்ளாமல் இருப்பதா என்கிற மக்களின் ஊசலாட்ட போக்கு ஊழல், லஞ்சம், இன்னபிற அரசியல் சுரண்டலுக்கு எதிராக களம் இறங்கும் நடுநிலை மனிதர்கள் அல்லது தொடக்க நிலை அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பட்டமான உண்மை. ஏனெனில் ஒரு போரட்டம் என்பது ஒருவரோடு முடியாது. அதேப்போல் ஒருவர் எழுப்பும் குரல் அரசியல் அதிகாரத்தால் நசுக்கப்படும். அதே ஒட்டுமொத்த மக்களின் குரல் என்றால் அதிகாரம் கொஞ்சம் யோசிக்கும்.
ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில். கஞ்சா குடிச்சவன் கை நடுங்குவதுப்போல ஊழல் செய்யாவிட்டால் இந்திய அரசியல்வாதிகள் கை நடுங்கிக்கொண்டே இருக்கும்போல. அன்னா ஹசாரேவின் பிடிவாதமான கோரிக்கைகள் ஒருபுரம் ஏற்கத்தக்கதாக இருப்பினும் எப்படி காந்தியின் உண்ணாவிரத அரசியலுக்கு பின்னால் இந்துத்துவா இருந்ததோ அதேப்போல் அன்னா ஹசாரேவின் உண்ணா அரசியலுக்கு பின்னாலும் இந்துத்துவாவின் பிரதிநிதிகளான பா.ஜ.க நிற்பதுதான் கவலைக்கிடம்.
சக அரசியல்வாதிகள் போல் அன்னாவும் தேர்தல் அரசியலுக்கு வர துடிக்கிறார். அதற்கு காந்தியைப்போல உடலரசியல் நடத்துகிறார். ஊழலை அடியோடு ஒழித்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்கலாம் என நினைக்கும் அன்னாவின் கட்சியிலும் எதிர்காலத்தில் ஊழல் நடக்காமல் இருக்காது. அன்னாவின் அரசியலுக்கு வட இந்தியர்களின் ஆதரவு வழக்கம்போல் பெருமளவில் இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரு துளியும் இல்லை.
பொதுவாகவே வட இந்தியர்கள் போராடும்போது தென்னிந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும், தென்னிந்தியர்கள் ஏதாவது கோரிக்கைவைத்து போராடும்போது வட இந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் காலம் காலமாக நடந்துவரும் கண்ணாமுச்சி விளையாட்டுகள்.
அன்னா ஹசாரேவின் கோரிக்கையினை காங்கிரசு ஏற்காததன் காரணம். ஏற்றால் காங்கிரசு தலைவர் முதல் கடைநிலை காங்கிரசுகாரர்வரை ஊழல் செய்துவைத்திருப்பதாலேயே என்பதை பேசாத மக்கள் இல்லை.மேலும் கைது செய்வதும் பின் விடுதலை செய்வதுமான சித்துவிளையாட்டும் தேவையில்லை. ஒருபக்கம் அன்னாவை தூக்கிவிடுவதாகவும், இன்னொரு பக்கம் நீர்த்துப்போக செய்வதுமாகவே காய்கள் நகர்த்தப்படுகின்றன.இதை சமீபத்திய கைதுதானது அன்னாவிற்கான ஆதரவு இந்தியாவில் எந்தநிலையில் இருக்கிறது என்பதை மத்திய அரசு நாடிபிடித்து பார்ப்பதாகவே அமைந்தது. இப்படிபட்ட தொடைநடுங்கி அரசியலும் தேவையில்லை. வழக்கப்படி போரட்டத்தை கலவரமாக்கி துப்பாக்கி சூடெல்லாம் நடத்தி அன்னாவை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து அடக்கிவிடலாம். ஆனால் காங்கிரசு அரசு அன்னாவுடன் கண்ணாமுச்சு விளையாட்டு விளையாடுவது எதற்காக என்றுதான் நம்மால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.
இறுதியாக திரு.அன்னா ஹசாரேக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் உங்கள் அரசியலை உங்கள் பாணியிலேயே முன்வையுங்கள் மாறாக "காந்தியவழியில்" என்கிறபோது எங்களைப்போன்ற சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் எதிரானதாக ஆகிவிடக்கூடாது. காந்தி ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை மாறாக ஊழலுக்கும், சாதியத்திற்கும் ஆதரவாகவே காந்தியின் பலபோராட்டங்கள் இருந்திருக்கின்றன. நீங்கள் எதிர்க்கட்சிகளின் அல்லது உங்களை ஆதரிக்கும் கட்சிகளின் தோளிலிருந்து இறங்கிவந்து போராடினால் உங்கள் பின்னால் மக்கள் திரள்வார்கள் என்பது உறுதி.
அன்னா ஹசாரேவுக்கு தமிழகத்தில் இருந்து சிற்சில ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது அரசியலே. அதற்காக "யாரந்த அன்னா ஹசாரே இவ்வளவு நாள் எங்கிருந்தார்" என்று கேட்பது மருத்துவர் ராமதாசுக்கு அழகல்ல. ஏனெனில் மருத்துவர். இராமதாசு திடீரென்று தமிழை காப்பாற்ற வந்து "தமிழ்க்குடிதாங்கி" வேடம் போட்டபோதும் இதே கேள்விதான் எழுந்தது அதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. தேவையெனில் தமிழர் கட்சியாகவும் பிறகி படையாச்சிகளின் கட்சியாகவும் நிறமாற்றிக்கொண்டே இருக்கும் மருத்துவர். இராமதாசு இதுவிடயத்தில் அடக்கிவாசிக்கலாம்.
ஊழல் வெல்கிறதா....ஓய்கிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில். கஞ்சா குடிச்சவன் கை நடுங்குவதுப்போல ஊழல் செய்யாவிட்டால் இந்திய அரசியல்வாதிகள் கை நடுங்கிக்கொண்டே இருக்கும்போல. அன்னா ஹசாரேவின் பிடிவாதமான கோரிக்கைகள் ஒருபுரம் ஏற்கத்தக்கதாக இருப்பினும் எப்படி காந்தியின் உண்ணாவிரத அரசியலுக்கு பின்னால் இந்துத்துவா இருந்ததோ அதேப்போல் அன்னா ஹசாரேவின் உண்ணா அரசியலுக்கு பின்னாலும் இந்துத்துவாவின் பிரதிநிதிகளான பா.ஜ.க நிற்பதுதான் கவலைக்கிடம்.
சக அரசியல்வாதிகள் போல் அன்னாவும் தேர்தல் அரசியலுக்கு வர துடிக்கிறார். அதற்கு காந்தியைப்போல உடலரசியல் நடத்துகிறார். ஊழலை அடியோடு ஒழித்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்கலாம் என நினைக்கும் அன்னாவின் கட்சியிலும் எதிர்காலத்தில் ஊழல் நடக்காமல் இருக்காது. அன்னாவின் அரசியலுக்கு வட இந்தியர்களின் ஆதரவு வழக்கம்போல் பெருமளவில் இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரு துளியும் இல்லை.
பொதுவாகவே வட இந்தியர்கள் போராடும்போது தென்னிந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும், தென்னிந்தியர்கள் ஏதாவது கோரிக்கைவைத்து போராடும்போது வட இந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் காலம் காலமாக நடந்துவரும் கண்ணாமுச்சி விளையாட்டுகள்.
அன்னா ஹசாரேவின் கோரிக்கையினை காங்கிரசு ஏற்காததன் காரணம். ஏற்றால் காங்கிரசு தலைவர் முதல் கடைநிலை காங்கிரசுகாரர்வரை ஊழல் செய்துவைத்திருப்பதாலேயே என்பதை பேசாத மக்கள் இல்லை.மேலும் கைது செய்வதும் பின் விடுதலை செய்வதுமான சித்துவிளையாட்டும் தேவையில்லை. ஒருபக்கம் அன்னாவை தூக்கிவிடுவதாகவும், இன்னொரு பக்கம் நீர்த்துப்போக செய்வதுமாகவே காய்கள் நகர்த்தப்படுகின்றன.இதை சமீபத்திய கைதுதானது அன்னாவிற்கான ஆதரவு இந்தியாவில் எந்தநிலையில் இருக்கிறது என்பதை மத்திய அரசு நாடிபிடித்து பார்ப்பதாகவே அமைந்தது. இப்படிபட்ட தொடைநடுங்கி அரசியலும் தேவையில்லை. வழக்கப்படி போரட்டத்தை கலவரமாக்கி துப்பாக்கி சூடெல்லாம் நடத்தி அன்னாவை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து அடக்கிவிடலாம். ஆனால் காங்கிரசு அரசு அன்னாவுடன் கண்ணாமுச்சு விளையாட்டு விளையாடுவது எதற்காக என்றுதான் நம்மால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.
இறுதியாக திரு.அன்னா ஹசாரேக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் உங்கள் அரசியலை உங்கள் பாணியிலேயே முன்வையுங்கள் மாறாக "காந்தியவழியில்" என்கிறபோது எங்களைப்போன்ற சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் எதிரானதாக ஆகிவிடக்கூடாது. காந்தி ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை மாறாக ஊழலுக்கும், சாதியத்திற்கும் ஆதரவாகவே காந்தியின் பலபோராட்டங்கள் இருந்திருக்கின்றன. நீங்கள் எதிர்க்கட்சிகளின் அல்லது உங்களை ஆதரிக்கும் கட்சிகளின் தோளிலிருந்து இறங்கிவந்து போராடினால் உங்கள் பின்னால் மக்கள் திரள்வார்கள் என்பது உறுதி.
அன்னா ஹசாரேவுக்கு தமிழகத்தில் இருந்து சிற்சில ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது அரசியலே. அதற்காக "யாரந்த அன்னா ஹசாரே இவ்வளவு நாள் எங்கிருந்தார்" என்று கேட்பது மருத்துவர் ராமதாசுக்கு அழகல்ல. ஏனெனில் மருத்துவர். இராமதாசு திடீரென்று தமிழை காப்பாற்ற வந்து "தமிழ்க்குடிதாங்கி" வேடம் போட்டபோதும் இதே கேள்விதான் எழுந்தது அதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. தேவையெனில் தமிழர் கட்சியாகவும் பிறகி படையாச்சிகளின் கட்சியாகவும் நிறமாற்றிக்கொண்டே இருக்கும் மருத்துவர். இராமதாசு இதுவிடயத்தில் அடக்கிவாசிக்கலாம்.
ஊழல் வெல்கிறதா....ஓய்கிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
Friday, August 12, 2011
தூக்கு தண்டனைக்கு எதிரானது
தூக்கு தண்டனைக்கு எதிரான தோழர்.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாவின் இயக்கத்தோடு இணைந்து போராடுவோம் தோழர்களே வாருங்கள்.
Friday, July 29, 2011
ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என ஐ.நா அவையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் கோரிக்கையை ஏற்று பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரித்துத் தருவதென விடுதலைச் சிறுத்தைகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாகக் கடந்த 26.07.2011 அன்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் புதுச்சேரியில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. காமராசர் சிலை அருகில் பிலால் உணவகம் எதிரில் நடைபெற்ற அந்த இயக்கத்தில் இரண்டுமணி நேரத்தில் சுமார் ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து கையொப்பமிட்டனர். பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.
Thursday, March 31, 2011
கவி மதியும் கவிமதியும்... தேனம்மை லெக்ஷ்மணன்
அடுத்தவர் படைப்பை வாசிக்கவே நேரமில்லை என சலித்துக்கொள்ளும் எழுத்தாளர்கள் மத்தியில் அடுத்தவர் படைப்புகளை வாசிப்பதோடு நில்லாமல் அவரை பற்றியும் அவர்தம் எழுத்துகளைப்பற்றியும் தான் அறிந்த தளங்களில் எழுத மனம் வேண்டும். அந்த வரிசையில் என்னைப்பற்றியும் என் கவிதைகளைப் பற்றியும் கீற்றுவில் எழுதியிருக்கும் அருமை அக்கா. தேனம்மை லஷ்மணன் அவர்களுக்கு நன்றியுடனும், சில திருத்தங்களுடனும் இங்கே வெளியிடுகிறேன்.
------------------------------------------------------------------------------------
கவி மதியும் கவிமதியும்...
தேனம்மை லெக்ஷ்மணன் செவ்வாய், 29 மார்ச் 2011 12:44
இசுலாமிய நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் எழுத்துக்களில் மிகவும் கவனிக்கப் படவேண்டியவர்கள், வாசிக்கப்படவேண்டியவர்கள் என என்னிடம் ஒரு லிஸ்ட் உண்டு.. மிக அருமையான, நேர்த்தியான பகிர்வுகளுக்குச் சொந்தந்தகாரர்கள். கவிமதி, ஜமாலன், ஆபிதீன், ஆசாத்ஜி. ஆசிஃப் மீரான். இதில் ஸ்டார்ஜனும், அக்பரும், இப்படிக்கு நிஜாம், ஜமால், நவாஸ், ஜெய்லானியும் உண்டு.
என் அன்பு சகோதரர் கவிமதி முதலில்.. இவரின் கவிதைத் தொகுதி ,"தண்ணீர்ப் படிகள்" படித்து கண்ணீர் வந்தது உண்டு.. குழந்தைப் பருவத்தில் நம்மை நெருக்கமாக உணரவைக்கும் நட்பு வயது ஏற ஏற பிரித்துச் செல்கிறது. அண்மையில் செல்லவும் பேசவும் கூட சமூகம் கட்டுக்களை முன் வைக்கிறது. இந்தக் கவிதைகளில் சிறுவயதில் நாம் களங்கமில்லாமல் கொண்ட நட்பை பருவ வயதிலும், திருமண வயதிலும், அதன் பின்னர் பல வருடங்கள் .. வாழும் நாள் வரையிலும் எடுத்து செல்லும் நேர்த்தி மிக அருமை.. அண்ணன் தம்பி இல்லாத ஒரு ஆணின் உறவு காதலாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன. இது போல மிக அழகான நட்பாகவும் இருக்கலாமே..
நம் நட்பைச் சரியாகப்
புரிந்துகொண்ட போதே
நினைத்தேன்
நம்மை இங்கே விட்டு
மாடியில்
உன் மனைவியும்
என் கணவனும்
புதுப்பிக்கின்றனர்
தங்கள்
பள்ளி வாழ்க்கையின்
பசுமைகளை.
மற்றும்
தலைமுடி
நகம்
பயணச்சீட்டு
இன்னபிறவென
சேமித்து வைக்கும் பைத்தியக்காரதனம்
எப்போதும் நட்பிற்கு
அவசியமேயில்லை..
இவை தண்ணீர்ப் படிகளில் எனக்குப் பிடித்தவை.. ஜென் தத்துவம்..., பின் நவீனத்துவம் என மிரட்டாமல் மிக எளிமையான மனம் தொடும் கவிதைகள் இவை..
நிலாச்சோறு உண்டிருக்கிறீர்களா.. நாம் சிறு பிள்ளைகளாய் இருந்த போது அத்தையோ அம்மாவோ பிள்ளைகளை வட்டமாக அமரவைத்து குழம்பு ஊற்றிப் பிசைந்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு கவளம் கொடுப்பார்கள்.. நாம் சிரித்துப் பேசிக் கொண்டே உண்ணுவோம், ஓடி ஆடி விளையாடுவோம், தொலைக்காட்சி நம்மை தின்னாத காலம் அது.. அந்த இன்பம் எல்லாம் இன்று தனித்த வீடுகளில் வாழும் குழந்தைகளுக்கு வருட விடுமுறை நாட்களிலாவது கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
இந்த ஏக்க உணர்வுகளை பதிவு செய்து இருக்கிறார் தண்ணீர்ப் படிகளில் ..
”என் தெரு வழியே போறவரே” என்ற தொகுதி முழுக்க உரிய அங்கீகாரமில்லாமல் சிதறிக்கிடக்கும் மனிதம் பற்றிய நெகிழ வைக்கும் கவிதைகள்..
என்
தெரு வழியே
போறவரே..
எப்போதேனும்
பேசியதுண்டா
பெரும்
அங்காடிகளில்
பேரம்?
இல்லையெனில்
ஏன் பேசுகிறீர்கள்
இத்தனை பேரம்
என் கூடைக்கருகில்..?
என இது போல சிந்திக்க வருந்த வைத்த கவிதைகள் அனேகம்..
அமீரகம் சென்ற போது சந்தித்த முதல் வலைப்பதிவர் மற்றும் குறிப்பிடக்கூடிய எழுத்தாளர் இவர். தை இதழில் இவரது கவிதை ,
பார்வையற்ற புத்தன்..
உன்னினத்திற்கு மட்டுமென்ற
பிரிவினைவாதங்களில்
குளிர்ந்தேயிருக்கின்றன
போதி மரங்கள்
எம்மினக் குருதியில்..
என்ன சொல்ல... இன்னும் குருதிக்காட்டில் முள்வேலியில் வாழ்பவர்கள் பற்றி..சொல்ல ஏதும் வார்த்தை கூட துணை வருவதில்லை..
இவரின் இணைய தளம். www.kavimathy.com
இதில் "நீ எங்கிருக்கிறாய்" என்ற கவிதையில்
அவர்கள் காட்டிய படத்தில்
ஈழத்தை தவிர்த்து
வானத்தைப் பார்க்கிறது
உன் கண்கள்
அப்போதே தெரிந்துக்கொண்டோம்
அது நீ இல்லையென//
இல்லை என்று சொல்லிக்கொண்டே
எங்களை பிளந்து பிளந்து
தேடுகிறான்
முன்பு எங்களோடு இருந்தவன்
இன்று எங்களுக்குள்
இருப்பாயோவென
கொஞ்ச நாளாவது
குளிர்ந்துபோகட்டும்
திடீரென்று தோன்றும் உன்னிடம்
தோற்றுப் போகவேண்டாமா
எமக்குத் தெரியும்
எவனுக்கும் சொல்ல அவசியமில்லை
எங்கு நீ இருக்கிறாய் என்பதை.
இந்தக் கவிதைகளின் அசாத்திய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.
8 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கும் இவர் சிறுகதைத் தொகுபிற்காக ” புதுச்சேரி மூவொரு அறக்கட்டளை விருது “ பெற்றிருக்கிறார்.
பெரியாரின் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு ..சாதி ஒழிப்பும் பெண்ணெழுச்சியும்தான் உண்மையான சமுதாய விடுதலை என எண்ணுபவர்.
பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டே தன் பெயரை கவிதைகளின் ஒளிநிலவாய் .. ”கவிமதியாய்..” மாற்றிக் கொண்டார். பெண்கள் கற்க வேண்டும், தன் சுயசார்போடு நிற்கவேண்டும் என்ற பிடிவாதமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் இவர். மதம் , இனம் சார்ந்து பெண்ணை வீட்டிலேயே அடக்கி வைத்தல் கூடாது.. பெண் எழுச்சி வேண்டும். பெண்கள் உயர்வடைய வேண்டும்.ஆணும் பெண்ணும் சமமாய் பார்க்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பலவித எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிவு செய்து வருபவர் இவர்.
கீற்று, வானவில், தை, ஆயுத எழுத்து, குளம், தமிழ் மணம், மாற்று, இலக்கியம் - புதுச்சேரி. இவற்றில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
”மழை மழையாய், தும்பிக்காரன்,கானல் நீர் மீன்கள்,மதகுப் பலகைகள், என் தெரு வழியே போறவரே,தண்ணீர்ப் படிகள், மதம் ஒரு கற்பிதம், நிறங்களற்ற தனிமை ” இவரின் நூல்களில் சில
"வெட்டியெறிய ஆடுகளல்ல..
நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள் .."
என்பது இவருக்குப் பிடித்த மேற்கோள்..
ஃபிப்ரவரி 2010 இல் இவரின் மதகுப் பலகைகள் நூலுக்கு திருமதி கி. ராஜநாராயணன் அவர்களின் துணைவியாரிடம் இருந்து திருமதி அக்கலீமா கவிமதி விருதை வாங்கினார். இன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் கவிமதி..
கவி மதியும்., கவிமதியும் கீற்றுவில்..:)) http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13842:2011-03-29-07-14-27&catid=1:articles&Itemid=264
------------------------------------------------------------------------------------
கவி மதியும் கவிமதியும்...
தேனம்மை லெக்ஷ்மணன் செவ்வாய், 29 மார்ச் 2011 12:44
இசுலாமிய நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் எழுத்துக்களில் மிகவும் கவனிக்கப் படவேண்டியவர்கள், வாசிக்கப்படவேண்டியவர்கள் என என்னிடம் ஒரு லிஸ்ட் உண்டு.. மிக அருமையான, நேர்த்தியான பகிர்வுகளுக்குச் சொந்தந்தகாரர்கள். கவிமதி, ஜமாலன், ஆபிதீன், ஆசாத்ஜி. ஆசிஃப் மீரான். இதில் ஸ்டார்ஜனும், அக்பரும், இப்படிக்கு நிஜாம், ஜமால், நவாஸ், ஜெய்லானியும் உண்டு.
என் அன்பு சகோதரர் கவிமதி முதலில்.. இவரின் கவிதைத் தொகுதி ,"தண்ணீர்ப் படிகள்" படித்து கண்ணீர் வந்தது உண்டு.. குழந்தைப் பருவத்தில் நம்மை நெருக்கமாக உணரவைக்கும் நட்பு வயது ஏற ஏற பிரித்துச் செல்கிறது. அண்மையில் செல்லவும் பேசவும் கூட சமூகம் கட்டுக்களை முன் வைக்கிறது. இந்தக் கவிதைகளில் சிறுவயதில் நாம் களங்கமில்லாமல் கொண்ட நட்பை பருவ வயதிலும், திருமண வயதிலும், அதன் பின்னர் பல வருடங்கள் .. வாழும் நாள் வரையிலும் எடுத்து செல்லும் நேர்த்தி மிக அருமை.. அண்ணன் தம்பி இல்லாத ஒரு ஆணின் உறவு காதலாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன. இது போல மிக அழகான நட்பாகவும் இருக்கலாமே..
நம் நட்பைச் சரியாகப்
புரிந்துகொண்ட போதே
நினைத்தேன்
நம்மை இங்கே விட்டு
மாடியில்
உன் மனைவியும்
என் கணவனும்
புதுப்பிக்கின்றனர்
தங்கள்
பள்ளி வாழ்க்கையின்
பசுமைகளை.
மற்றும்
தலைமுடி
நகம்
பயணச்சீட்டு
இன்னபிறவென
சேமித்து வைக்கும் பைத்தியக்காரதனம்
எப்போதும் நட்பிற்கு
அவசியமேயில்லை..
இவை தண்ணீர்ப் படிகளில் எனக்குப் பிடித்தவை.. ஜென் தத்துவம்..., பின் நவீனத்துவம் என மிரட்டாமல் மிக எளிமையான மனம் தொடும் கவிதைகள் இவை..
நிலாச்சோறு உண்டிருக்கிறீர்களா.. நாம் சிறு பிள்ளைகளாய் இருந்த போது அத்தையோ அம்மாவோ பிள்ளைகளை வட்டமாக அமரவைத்து குழம்பு ஊற்றிப் பிசைந்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு கவளம் கொடுப்பார்கள்.. நாம் சிரித்துப் பேசிக் கொண்டே உண்ணுவோம், ஓடி ஆடி விளையாடுவோம், தொலைக்காட்சி நம்மை தின்னாத காலம் அது.. அந்த இன்பம் எல்லாம் இன்று தனித்த வீடுகளில் வாழும் குழந்தைகளுக்கு வருட விடுமுறை நாட்களிலாவது கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
இந்த ஏக்க உணர்வுகளை பதிவு செய்து இருக்கிறார் தண்ணீர்ப் படிகளில் ..
”என் தெரு வழியே போறவரே” என்ற தொகுதி முழுக்க உரிய அங்கீகாரமில்லாமல் சிதறிக்கிடக்கும் மனிதம் பற்றிய நெகிழ வைக்கும் கவிதைகள்..
என்
தெரு வழியே
போறவரே..
எப்போதேனும்
பேசியதுண்டா
பெரும்
அங்காடிகளில்
பேரம்?
இல்லையெனில்
ஏன் பேசுகிறீர்கள்
இத்தனை பேரம்
என் கூடைக்கருகில்..?
என இது போல சிந்திக்க வருந்த வைத்த கவிதைகள் அனேகம்..
அமீரகம் சென்ற போது சந்தித்த முதல் வலைப்பதிவர் மற்றும் குறிப்பிடக்கூடிய எழுத்தாளர் இவர். தை இதழில் இவரது கவிதை ,
பார்வையற்ற புத்தன்..
உன்னினத்திற்கு மட்டுமென்ற
பிரிவினைவாதங்களில்
குளிர்ந்தேயிருக்கின்றன
போதி மரங்கள்
எம்மினக் குருதியில்..
என்ன சொல்ல... இன்னும் குருதிக்காட்டில் முள்வேலியில் வாழ்பவர்கள் பற்றி..சொல்ல ஏதும் வார்த்தை கூட துணை வருவதில்லை..
இவரின் இணைய தளம். www.kavimathy.com
இதில் "நீ எங்கிருக்கிறாய்" என்ற கவிதையில்
அவர்கள் காட்டிய படத்தில்
ஈழத்தை தவிர்த்து
வானத்தைப் பார்க்கிறது
உன் கண்கள்
அப்போதே தெரிந்துக்கொண்டோம்
அது நீ இல்லையென//
இல்லை என்று சொல்லிக்கொண்டே
எங்களை பிளந்து பிளந்து
தேடுகிறான்
முன்பு எங்களோடு இருந்தவன்
இன்று எங்களுக்குள்
இருப்பாயோவென
கொஞ்ச நாளாவது
குளிர்ந்துபோகட்டும்
திடீரென்று தோன்றும் உன்னிடம்
தோற்றுப் போகவேண்டாமா
எமக்குத் தெரியும்
எவனுக்கும் சொல்ல அவசியமில்லை
எங்கு நீ இருக்கிறாய் என்பதை.
இந்தக் கவிதைகளின் அசாத்திய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.
8 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கும் இவர் சிறுகதைத் தொகுபிற்காக ” புதுச்சேரி மூவொரு அறக்கட்டளை விருது “ பெற்றிருக்கிறார்.
பெரியாரின் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு ..சாதி ஒழிப்பும் பெண்ணெழுச்சியும்தான் உண்மையான சமுதாய விடுதலை என எண்ணுபவர்.
பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டே தன் பெயரை கவிதைகளின் ஒளிநிலவாய் .. ”கவிமதியாய்..” மாற்றிக் கொண்டார். பெண்கள் கற்க வேண்டும், தன் சுயசார்போடு நிற்கவேண்டும் என்ற பிடிவாதமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் இவர். மதம் , இனம் சார்ந்து பெண்ணை வீட்டிலேயே அடக்கி வைத்தல் கூடாது.. பெண் எழுச்சி வேண்டும். பெண்கள் உயர்வடைய வேண்டும்.ஆணும் பெண்ணும் சமமாய் பார்க்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பலவித எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிவு செய்து வருபவர் இவர்.
கீற்று, வானவில், தை, ஆயுத எழுத்து, குளம், தமிழ் மணம், மாற்று, இலக்கியம் - புதுச்சேரி. இவற்றில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
”மழை மழையாய், தும்பிக்காரன்,கானல் நீர் மீன்கள்,மதகுப் பலகைகள், என் தெரு வழியே போறவரே,தண்ணீர்ப் படிகள், மதம் ஒரு கற்பிதம், நிறங்களற்ற தனிமை ” இவரின் நூல்களில் சில
"வெட்டியெறிய ஆடுகளல்ல..
நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள் .."
என்பது இவருக்குப் பிடித்த மேற்கோள்..
ஃபிப்ரவரி 2010 இல் இவரின் மதகுப் பலகைகள் நூலுக்கு திருமதி கி. ராஜநாராயணன் அவர்களின் துணைவியாரிடம் இருந்து திருமதி அக்கலீமா கவிமதி விருதை வாங்கினார். இன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் கவிமதி..
கவி மதியும்., கவிமதியும் கீற்றுவில்..:)) http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13842:2011-03-29-07-14-27&catid=1:articles&Itemid=264
Saturday, December 04, 2010
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில் ஒரு நிஜ ஹீரோவின் வரலாறு!
வரலாற்று நாயகன், பேரறிஞர், துணிச்சலான தலைவன்…. இந்த வார்த்தைகளுக்கு வெளியில் அர்த்தம் தேட வேண்டியதில்லை. இந்த தேசத்திலேயே ஒருவர் வாழ்ந்து, வழிகாட்டி, இன்றும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார்… அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
தலித் இன மக்களுக்கு மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க உதித்த சூரியன்.
பெரும்பாலும் தலைவர்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைப்பார்கள். கூச்சலிட வைப்பார்கள்… ஆட்டுமந்தைக் கூட்டமாகவே எப்போதும் அவர்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் சுயசிந்தனை பெற வேண்டும் என்று மட்டும் விரும்பவே மாட்டார்கள்.
ஆனால் அம்பேத்கர் என்ற சூரியன் மட்டும் பகுத்தறிவு ஒளியை தன் இனத்தின் அடிமை மக்களுக்கு தாராளமாய்த் தந்தது. கல்வியும், அரசியல் – அதிகார கைக்கொள்ளலுமே, தலித் இன மக்களின் சமூக அடிமத்தளையைக் கட்டறுக்கும் என்பதை ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்த மாபெரும் சிந்தனாவாதி டாக்டர் அம்பேத்கர்.
மிகச் சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவ மேதை, சமூக சீர்த்திருத்தவாதி, பகுத்தறிவு சிந்தனையாளன், கேட்கும் எவரையும் அடித்து வீழ்த்தும் அபாரமான பேச்சாளர், வரலாற்று ஆசான், மிகச்சிறந்த எழுத்தாளர், ஆங்கிலேயர்களும் வியக்கும் ஆங்கில அறிவுக்குச் சொந்தக்காரர்… இத்தனை அறிவையும் பெருமைகளையும் தன் இன மக்களும் பெற வேண்டும் என்பதற்காக தன் குடும்பம், உடல் நலன் அனைத்தையும் மறந்து கடைசி மூச்சு வரை உழைத்தார்.
தன் இறுதிமூச்சு வரை சமூக அடிமைத்தன விலங்கை உடைக்க அவர் களமாடிய போராட்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமல்ல. நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்… ஆனால் இந்த கீழ்மைத் தனம் நிரம்பிய ஒரு மத அடையாளத்தோடு நிச்சயம் இறக்க மாட்டேன் என்று சபதமிட்டு, புத்த மதத்துக்கு மாறி இந்து சனாதனத்துக்கு சாட்டையடி கொடுத்தவர் அம்பேத்கர்.
லண்டன் வட்ட மேஜை மாநாட்டின்போது, ஹரிஜனர்களின் காவலன் நான் என்று காந்தி போன்றவர்கள் போலி கோஷமிட்டபோது, அவர்களின் முகத் திரையை அங்கேயே கிழித்துப் போட்டவர் அம்பேத்கர் ஒருவர்தான். அந்த மனிதரின் துணிச்சல் அன்றைக்கு காந்தியை மட்டுமல்ல, அகிலத்தையே ஆட வைத்தது என்றால் மிகையல்ல!
இப்படியொரு அசாதாரண தலைவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது தமிழில்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் பெயரில் 2002-ல் வெளியான இந்தப் படம், அசாதாரண கால தாமதத்துக்குப் பிறகே தமிழுக்கு வருகிறது.
மம்முட்டி மிகச் சிறப்பாக நடித்த இந்தப் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.
காந்தியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்களைக் கொண்ட ஒரே படம் என்றால் அது அநேகமாக பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்கும்.
அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டான, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, என்பதை இந்தப் படத்தில் அப்படியே அனுமதித்துள்ளது பெரிய விஷயம்.
பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”
இந்த நிகழ்வும் வசனங்களும் கூட அம்பேத்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
அம்பேத்கராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளவர் மம்முட்டி. அம்பேத்கரின் முதல் மனைவியாக ‘சலாம் பாம்பே’ புகழ் சோனா குல்கர்னி நடித்துள்ளார். மம்முட்டிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது அளிக்கப்பட்டது இந்தப் படத்துக்காக.
ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் பாராட்டிய ஒரே படம் அம்பேத்கர்தான்.
தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) வெளியாகும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக வரவேற்க தலித் இயக்கங்களும், முற்போக்கு சிந்தனை அமைப்புகளும் தயாராகி வருகின்றன.
தலித் மக்கள் என்றல்லாமல், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்துக்காக சட்ட வரைவையே முன்வைத்தவர் அம்பேத்கர் மட்டுமே. எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்றை பெண்கள் திரளாகப் பார்க்க வேண்டும். இனவேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் பார்க்க வேண்டிய படம் அம்பேத்கர்.
-பிரபா
INOX, SATHYAM, ESCAPE, ABIRAMI : சனி & ஞாயிறு காலைக் காட்சி
AGS 10 a.m,
RAKKI 11.30 a.m & 10 p.m
MAAYAJAL 11.30 a.m
ALBERT 11.15 a.m
UDAYAM 11.30 a.m
PVR 9.00 p.m
ஆகிய திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. ஆடுகளாய் இருந்த நம்மை சிறுத்தைகளாய் மாற்றிய புரட்சியாளரின் வரலாற்றுப் படத்தை பாருங்கள்.
-
‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.
அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி: http://www.thiruma.in/2010/12/blog-post.html
Friday, November 26, 2010
அண்ணைக்கு அன்னை - அறிவுமதி கவிதை

அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா
என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?
ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்
தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்
சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை
என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை
அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை
அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்
புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்
இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்
இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்
நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்
நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்
தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்
தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்
தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்
மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்
என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்
வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்
ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்
சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்
உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்
முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே
ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே
உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே
ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்...............
Thursday, November 25, 2010
நெஞ்சில் கைவைத்து நேர்மையாகச் சிந்திப்போம்! - வே. ஆனைமுத்து
ஈ.வெ. இராமசாமி என்கிற மானிடர் நான்காம் வகுப்பு வரை படித்தார். ஆனால் தமிழகத்திலும் இந்தியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் சோவியத்திலும் அவர் உலவினார். எளிய மக்களிடமும், அறிஞர்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் அவர் நேரிடையாகப் பேசினார். 1920 முதல் 1973 திசம்பர் 19 வரையில் நடந்தும் கட்டை வண்டியிலும், பேருந்திலும், தொடர் வண்டியிலும், மகிழுந்திலும், சீருந்திலும், கப்பலிலும் பயணம் மேற்கொண்டார். அவருடைய பயணம் மிகமிக நெடியது.
ஏச்சுப் பேச்சையும், கல்லடி, சொல்லடி, செருப்படி, சாணியடி, அழுகிய முட்டை அடி இவற்றையும் எதிர் கொண்டார். ஆனால் அடிக்க அடிக்க மேலே மேலே சீறி எழும் பந்துபோலப் பேச்சிலும் எழுத்திலும் கிளர்ச்சியிலும் ஊக்கம் குன்றாமல் உழைத்தார்.
தன்னைப்போன்ற மனிதனை - வா, போ, வாடா, போடா என்று அழைப்பதை வெறுத்தார். தொடாதே, தீண்டாதே, இந்தத் தெருவில் நடக்காதே என்ற உரிமைப் பறிப்பைக் கடுமையாகக் கண்டித்தார். அவ்வுரிமைகளை மீட்டுத்தர அயராது பாடுபட்டார். அடியே, ஏண்டி, வாடி, போடி என்று தத்தம் மனைவியை, மற்ற சாதிப் பெண்களை அழைப்பதைச் சாடினார்.
கல்லையும், செம்பையும் கடவுளாக எண்ணிய கோடிக்கணக்கான மக்களைச் சம்மட்டிகொண்டு அடிப்பதுபோல் சாடி, தக்க விளக்கம் கூறிச் சிந்திக்க வைத்தார்.
மனிதனை, மனிதனாக மதிக்கும் மாண்பைக் கற்பித்தார். இவ்வகையில் படிந்து போன பழைமையை அப்பட்டமாக-அம்மணமாக - நிருவாணமாகத் தோலுரித்துக் காட்டிப் பேசியவர் அவர்; எழுதியவர் அவர். 53ஆண்டுக்காலம் ஓய்வறியாத போர் வீரராகப் பரப்புரை செய்தவர்; களத்தில் நின்றவர்; போராடியவர் அவர். அவர்தாம் பெரியார் ஈ.வெ.ரா.
அவருடைய அடிப்படைக் கொள்கைகள் மானிடத்தை எல்லாவித அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை செய்வதை நோக்கமாகக்கொண்டவை.
1. தாம் பிறந்த நாட்டில் பிறவி காரணமாக மேல்சாதி, கீழ்ச்சாதி இருப்பதை அடியோடு ஒழிக்க விரும்பினார்.
2. தாம் வாழும் சமுதாயத்தில் உழைப்பாளிகளாகவும் பெரிய எண்ணிக்கையிலும் உள்ள வெகு மக்களுக்குச் சமுதாயம், கல்வி, அரசியல் பதவி, அரசு வேலை இவற்றில் உரிய பங்கு வேண்டும் என்பதற்காக 53 ஆண்டுக்காலம் இடைவிடாது போராடினார். அப்போராட்டம் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்கிற வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.
இவற்றுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசிலும் மற்ற மாநில அரசுகளிலும் சட்ட வடிவங்களில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. அவர் கோரியபடி, விகிதாசார வகுப்புவாரி உரிமை, 53 ஆண்டுக்கால அவருடைய உழைப்புக்குப் பிறகும் - அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆன பிறகும் எட்டப்படாததாக இருக்கிறது.
3. மானிடத்தில் செம்பாதி - சரிபகுதி பெண்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் முதன்முதலாகப் பதிந்த சமத்துவ எண்ணம் ஆணுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்ணுக்கு வந்துசேரவேண்டும் என விரும்பிய அவர் 1929இலேயே அவற்றுக்குச் சட்ட வடிவிலான பாதுகாப்புக் கோரினார். அவர் கோரிய பெண்ணுரிமைப் பாதுகாப்புகள் இந்திய அரசினாலேயே சட்ட வடிவில் தரப்பட முடியும். அவர் சட்ட அவையை நாடாதவர். ஆயினும், அவரால் போற்றப்பட்ட சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். தாம் இந்திய அமைச்சராக விளங்கியபோது பெண் மக்களுக்கு உரிய எல்லா உரிமைகளுக்கும் ஏற்ற சட்டங்களை 1947லேயே முன்மொழிந்தார். 1955லும் 1956லும் அவை நிறைவேற்றப்பட்டன.
பெண்ணுக்குச் சொத்தில் பங்கு உரிமை, மணவிலக்கு உரிமை, தத்துப்பிள்ளை ஆகும் உரிமை, மறுமண உரிமை எல்லாம் வந்துசேர்ந்தன. ஆயினும் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் முதலானவற்றால் நெஞ்சில் பதிக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து - அந்தப்பண்பாட்டிலிருந்து பெண்களும் விடுபடவில்லை; ஆண்களும் விடுபடவில்லை; மக்கள் தலைவர்களும் விடுபட வில்லை; மெத்தப் படித்தவர்களும் விடுபடவில்லை; ஆட்சியில் உள்ளவர்களும் விடுபடவில்லை; கல்வித் திட்டமும் விடுபடவில்லை. மேலும் நூல்கள், புதினங்கள், பருவ ஏடுகள், நாளேடுகள் என்கிற அறிவு புகட்டும் கருவிகள் எல்லாவற்றிலும் இன்றும் இவை படிந்துள்ளன; இவை மேலாதிக்கம் பெற்றுள்ளன.
கருத்துகளை உருவாக்குகிற- பொழுது போக்கப் பயன்படுகிற திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, அரியதான இணையதளம் எல்லாவற்றிலும் - எல்லா மொழிகளிலும் இவை செல்வாக்கோடு திகழ்கின்றன.
சட்டங்கள் வடிவத்தில் தமிழகத்தில் வந்திருக்கிற பெண்ணுரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, அனைத்துச் சாதியினரும் அருச்சகராகும் உரிமை, வகுப்புவாரி உரிமை பற்றிய எதுவும் கல்வியில் எந்த வகுப்பிலும்- முதல் வகுப்பில் தொடங்கிப் பட்ட மேற்படிப்பு வரையில் பாடமாக வைத்துக் கற்பிக்கப்படவில்லை. இவையெல்லாம் 1951முதல் அரசமைப்புச் சட்டத்திலும், தமிழக அரசுச் சட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பட்டவை.
1950-60, 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என அறுபதாண்டுக் காலத்தில் இங்கே பிறந்த - வளர்ந்த - படித்த-உயர்கல்வி பெற்ற கோடிக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வித் திட்டம் மூலம் இவை கற்பிக்கப்படவே இல்லை. அத்தகைய மூடத்தனமான கல்வியைப் பெற்று, பழைமை எண்ணங்களிருந்து விடுபடாத கோடிக்கணக்கானவர்கள் அடங்கிய மக்கள் பரப்பில் எங்கோ ஒரு மூலையில் நாள்தோறும் பெரியார் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதைச்செய்கிறோம்.
“கடவுள் இல்லை”, “கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”,
“பார்ப்பான் என்றும், பறையன் என்றும், சூத்திரன் என்றும் சொல்லாதே!”;
“இராமன் குடிகாரன்; சீதை விபச்சாரி”
“கந்தன் பிறப்புக் கதை அருவருப்பானது”
“ஆணுக்குப் பெண் சரிநிகர்”
எனத் தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்தத் தெருவிலும், எந்தச் சிலரும் இன்று மேடையேறிப் பேசலாம்; முழக்கலாம். இந்தஒரு வெற்றியை நமக்குப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். 1960, 1970களில் அவருடைய சொற்பொழிவுகளை எப்போதோ கேட்டவர்கள்; எங்கோ படித்தவர்கள்; அவரை நேரில் பார்த்தவர்கள்; 70,80 வயதினராக எல்லா இடங்களிலும் இன்று இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் இவர்கள் மறைந்துவிடுவர்.
“அவர்கள் பெரியார் கட்சிக்காரர்கள்; அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்று கூறிவிட்டு, அவற்றைத் தாங்கிக்கொள்கிறார்கள் (கூடிடநசயவந) தமிழக மக்கள். அவ்வளவுதான். இது நமக்கு வெற்றிபோல் தோன்றுகிறது. ஆனால், அவர்கள் எல்லோரும் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்பது இந்த வடிவத்தில்தான் இன்று உள்ளது.
வேறு எப்படி அவருடைய அடிப்படைக்கொள்கை வெற்றிபெற்றுள்ளது என்பதை நடுநிலையிலிருந்து நெஞ்சில் கை வைத்துச் சிந்தித்து நாம் விடைகூற வேண்டும்; எண்பிக்க வேண்டும்; நிலைநாட்ட வேண்டும்.
இரண்டு செய்திகளை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம் .
1. ஆணும் பெண்ணும் சமம் என்னும் எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் 1887 வாக்கில் பதிந்தது.
2. அந்தச் சமத்துவம் வந்து சேருவதற்கான வழிவகைகள்பற்றி - சட்டப் பாதுகாப்புகள்பற்றி 1929இல் தெளிவான திட்டங்களைச் சுயமரியாதை இயக்க முதலாவது மாநாட்டுத் தீர்மானங்களாக அவர் வடித்துத் தந்தார். அவையெல்லாம் உரிமையியல் சட்டம் சார்ந்தவை. அவற்றைப்பற்றிய சட்டங்களைச் செய்திட அன்றைய மாகாண அரசுக்கோ, இன்றைய மாநில அரசுக்கோ உரிமையில்லை. இந்திய அரசு என்கிற மய்ய அரசுதான் அதற்கான சட்டங்களைச் செய்ய முடியும்.
மய்ய அரசில் திராவிட அரசியல் கட்சியினர் என்றும் பெரும்பான்மைபெற இயலாது. அங்குப் பெரும்பான்மை பெற்றிருந்த தேசிய காங்கிரசுக் கட்சியினரும், சிறுபான்மையினராக இருந்த பொதுவுடைமைக் கட்சியினரும் இதில் முதலடியை எடுத்துவைக்க முன்வரவில்லை.
ஆனால், 1931 முதல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருந்த ஈ.வெ.ரா. வுக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 1936 முதற்கொண்டும், 1940சனவரி முதற்கொண்டும் நெருக்கமான உறவும் நட்பும் ஏற்பட்டன. 1954இல் இந்த நட்பு உச்ச நிலையை அடைந்தது. இருவரிடையே நல்ல புரிதலும் ஏற்பட்டது.
பெரியார் விரும்பிய பெண்ணுரிமைச் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் சட்ட வடிவம் தருகிற தன்மையில், 1947இல் “இந்துச் சட்டத்திருத்த மசோதா” என்கிற பெயரில் பலவற்றை நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவையெல்லாம் ஒன்றுவிடாமல் டாக்டர் அம்பேத்கர்1951இல் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகு- 1955லும் 1956லும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.ஆனால், அச்சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்தை இங்கு ஆடவரும் உருவாக்கவில்லை; மகளிரும் உருவாக்கவில்லை. அரசும் உருவாக்கவில்லை.
மேலும், ஆண் - பெண் சம உரிமை முழுவதுமாக வந்து சேர வேண்டப்படுகின்ற சமதர்ம சமுதாய அமைப்பு இங்கு மலரவில்லை. இது மலராமல் இங்கு ஆண்-பெண் சமத்துவம் என்பது முழுமையாக வரமுடியாது. உலகம் முழுவதற்கும் இது பொருந்தும், நிற்க.
1947இல் பெண்ணுரிமைபற்றிய சட்ட வரைவுகளை முன்மொழிந்த டாக்டர் அம்பேத்கர், மிகப் பெரிய தொலைநோக்குடனும் அறிவுக் கூர்மையுடனும் இன்னொரு சட்டத்திருத்தத்தையும் முன்மொழிந்திருந்தார்.
அது என்ன?
“இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அந்தத் தேதிவரையில் நடப்பிலிருந்த பழைய பழக்க வழக்கச் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டா” என்பதே அச்சட்ட வரைவின் அமைப்பாகும்.
அது என்றைக்கு 1947இல் முன்மொழியப் பட்டதோ அன்று முதல் 1951 வரையில் இராசேந்திர பிரசாத் அதைக் கடுமையாக எதிர்த்தார்; தேசிய காங்கிரசைச் சார்ந்த பழைமைவாதிகள் எதிர்த்தனர். 1951இல் அந்த வரைவு ஏற்கப்படாமல் அடியோடு நீக்கப்பட்டது.
அந்த விதி நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று அரசமைப்புச் சட்டத்தில், விதிகள் 13,372 இவற்றில் உள்ள, “நால்வருணம் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.
விதி 25இல் உள்ள “பழைய பழக்க வழக்கங்கள், ஆகமவிதிகள் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.
நால்வருணம், பழைய வழக்கச்சட்டங்கள் இவற்றைப் பாதுகாப்பதற்காக இருக்கிற விதிகள் இவை என்பது பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்குத் தெரியாது; நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் இவர்களில் பலருக்கும் தெரியாது.
இவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி “நால்வருண ஏற்பாட்டையும், பழைய பழக்கவழக்கச் சட்டங்களையும், ஆகம விதிகளையும் பாதுகாக்கிற விதிகள் 13, 25, 372 ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குங்கள்” என்று கோரித்தான் 26.11.1957இல் அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதிகளை மட்டும் அச்சிட்டு எரிக்கச் செய்தார், பெரியார்.
10,000 கறுஞ்சட்டை வீரர்கள்-3 ஆண்டு தண்டனை உண்டு; 3000 ரூபா தண்டம் உண்டு என்று தெரிந்தே அரசமைப்புச் சட்டத்தை எரித்தார்கள். உலக நாடுகளில் எதிலும் அன்றுவரை அரசியல் சட்டத்தை எவரும் எரிக்கவில்லை. இதைக்கண்டு இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது; உலகமே மூக்கின் மேல் விரலை வைத்துச் சிந்தித்தது.
“அரசியல் சட்டம் புனிதமானது” என்ற எண்ணம் உலகெங்கும் ஆட்சி செலுத்திய காலமது. பெரியாரின் கட்டளையை ஏற்று 10,000 பேர் அரசியல் சட்டத்தை எரித்தனர். 3000 பேர் ஒரு மாதம் வெறும் காவல் தண்டனை முதல் மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வரை பெற்றனர். நான் 18 மாதம் கடுங்காவல் பெற்றேன்.
சிறை வாழ்வின்போதே இரு மறவர்கள் மாண்டனர். வெளியில் வந்தவுடன் 20 பேர் செத்தனர். பல நூறு குடும்பங்கள் சீரழிந்தன. அவர்களுள் ஓராயிரம் பேர் 2010 இல் வயிற்றுப்பாட்டுக்குப் போராடுவோராக உள்ளனர் என்பதை நேரில் நாம் கண்டிருக்கிறோம்.
நால்வருணம், பழக்க வழக்கம், ஆகமம் இவற்றைப் பாதுகாக்கும் சட்டத்தை 53 ஆண்டுகளுக்கு முன் எரித்தோம். அதன் காரணமாக, அச்சட்டப் பகுதியை நீக்குகிற முயற்சியில் எத்தனைத் தப்படி முன்னேறியிருக்கிறோம்?
கடந்த 53 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு, சனதா, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சிகள் என்கிற அனைத்திந்தியக் கட்சிகளோ, மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமோ பின்னர் தோன்றிய அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் வட மாநிலக்கட்சிகளோ நாடாளுமன்றத்தில் இதற்காக என்ன முயற்சியை எடுத்தன?
சட்ட மன்றத்துக்குப்போகாத திராவிடர் கழகமோ, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியோ, பெரியார் திராவிடர் கழகமோ, சிந்தனையாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மானிட உரிமைக் காப்பு அமைப்பு முதலானவையோ இதற்காக மேற் கொண்ட முயற்சி என்ன? எப்போது முயன்றார்கள்? இங்கே தமிழ்நாட்டில் மட்டும் முயன்றால் என்ன பயன்? பழக்க, வழக்கம், ஆகம விதி, இவற்றுக்கான பாதுகாப்பை அப்படியே வைத்துக்கொண்டு -அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆகலாம் என்கிற சட்டமும், சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்கிற சட்டமும் எந்த அளவுக்குப் பயன்படும்?
சுயமரியாதைத் திருமணச் சட்டம் 20-1-1968 நடப்புக்கு வந்தது.
அத்துடன் சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? ஏன் அது செல்லாது என்று கூறப்பட்டது? அது செல்லுபடியாவதற்கு ஏற்றபடி, 1968இல் சட்டம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் யாவை? அதற்கு மாறாக, ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த திருமண முறையால் ஏற்பட்ட கேடு அல்லது இழிவு அல்லது குறைபாடு என்ன? என்கிற செய்திகள் பற்றி, 1968க்குப் பிறகு கடந்த 42 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஓர் ஆண்டு முழுவதும் நடைபெறும். இந்துக்கள் வீட்டுத் திருமணங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் த்தனை என்பதுபற்றி, எந்த ஓர் ஆண்டிலும் புள்ளி விவரம் பதிவு செய்யப்படவில்லை. அந்தந்த ஊர் மணியக்காரர் (ஏ.ஹ.டீ) வழியாக இனி வரும் ஓர் ஆண்டிலாவது அப்படிப்பட்ட புள்ளி விவரம் அரசினால் பதிவு செய்யப்படவேண்டும்.
இவ்விரண்டு திட்டங்களையும் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசினர் மேற்கொள்ள வேண்டும் - நிறைவேற்ற வேண்டும் என அன்புடனும் வற்புறுத்தியும் வேண்டிக் கொள்கிறோம். நிற்க.
“பழக்க வழக்கம், ஆகம விதி என்பவை எழுதப்பட்ட சட்டங்களைவிட வலிமையானவை” என்பதுதான் இந்துச் சட்டத்தின் உயிரான பகுதியாகும். இவை அடியோடு ஒழிக்கப்படுவது என்பது இந்திய அளவிலான இந்திய அரசமைப்பை அடியோடு மாற்றுவதனால் மட்டுமே முடியும்.
இதைப் புரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1968முதல் நிறைவேற்றப்பட்ட இவ்விரண்டு சட்டங்கள் மட்டுமே நாம் பெற்ற வெற்றி என்று நம்பினால் அது தவறாகும்.
நால்வருணப் பாதுகாப்பை ஒழிக்க இவை போதா. ஆகம விதி, பழக்கபழக்க வழக்கச் சட்டம், இவற்றை நீக்கிவிடவும் இவை உதவமாட்டா.
பார்ப்பனப் புரோகிதம், கோயில்கள், மடங்கள், மசூதிகள் மாதா கோயில்கள் இவற்றுக்கு உரிய அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இங்கு இருக்கும். இந்துச் சட்டமும் அரசமைப்புச் சட்டமும் நீதி மன்றங்களும் நாடாளுமன்றமும் இவற்றுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இச் சூழல்களில் “மதச்சார்பற்ற” தன்மை இங்கே எப்படி வரும்?
இவற்றைப்பற்றிப் பெரியார் தொண்டர்கள் எல்லோரும் பொறுமையாக எண்ணிப்பார்க்க வேண்டும்.
1. தந்தை பெரியார் 1919 முதல் வகுப்புவாரி உரிமைக்குக் குரல் கொடுத்தார். போராடினார். சட்டப்படி இது ஏற்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை வெகு மக்களுக்கு விகிதாசாரப் பங்கு உரிமை வரவில்லை.
2. 1922 முதல் தீண்டாமை ஒழிப்பு, நால் வருண ஒழிப்புக் கோரி முழங்கினார். இவற்றுக்குப் பாதுகாப்புத் தரும் இராமாயணம், மனுநீதி இவற்றை எரிக்கச் சொன்னார். ஆனால் இவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இன்றும் நம்மை ஆள்கிறது. இதை அடியோடு மாற்றிட அவர் விரும்பினார். அதுபற்றி இன்றளவும் எவரும் இணக்கமான முயற்சியை மேற்கொள்ளவில்லை.
3. 1927 முதல் கருத்தளவில் சமதருமம்பற்றிப் பேசிய பெரியார், 1932 முதல் 1935 வரையிலும் தீவிர சமதருமப் பரப்புரை செய்தார். 1964 முதல் 1973 வரை அப்பணியைத் தொடர்ந்து செய்தார். சமதருமம் வராமல் பெண்ணுரிமை முழுவடிவில் இங்கு வராது. தீண்டாமைக் கொடுமை ஒழியாது. மூடநம்பிக்கை ஒழிப்பு வெற்றி பெறாது என்கிற புரிதல் பெரியார் தொண்டர்களுக்கு வரவில்லை.
4. 1938இலும், 1939இலும் பெரியார் முன் வைத்த “தமிழ்நாடு”, “திராவிடநாடு” பிரிவினைக் கோரிக்கை தெளிவற்றது. 1945 செப்டம்பர் 30இல் அவர் முன் வைத்த “சுதந்தரத் திராவிடநாடு” கோரிக்கையும், 1.11.1956இல் அவர் முன்வைத்த “சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையும் மிகத் தெளிவானவை. “தனிச் சுதந்தர நாடு” கோரிக்கைகள், சோசலிச சோவியத்து ஒன்றியம் 1990இல் கலைக்கப்பட்ட பிறகு செல்வாக்கோடு திகழ முடியவில்லை. அப்போது முதல் உலக நாடுகள் மன்றம் என்ற அய்க்கிய நாடுகள் அவை பல் இல்லாத பாம்பாகிவிட்டது. அய்ரோப்பாவையும், சீனாவையும், சப்பானையும், மிஞ்சி இன்னமும் அமெரிக்கா ஒற்றை அதிகார ஆதிக்க மய்யமாக விளங்குகிறது. அது உலக அமைதியை உருக்குலைக்கிறது. மொழிவழி, இனவழி அடிப்படையிலான விடுதலை இயக்கங்களைத் துடைத்தெறிகிறது.
இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு, இந்திய ஒற்றை ஆதிக்க மய்யத்தை உடைத்துத் தன்னுரிமைபெற்ற தமிழ்நாடு - மற்றும் உள்ள மொழி வழி மாநிலங்களைக் கொண்ட ஓர் உண்மையான மதச்சார்பற்ற சமதருமக் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியாவை உருவாக்கினாலன்றி, தந்தை பெரியாரின் கொள்கைகளை நாம் வென்றெடுக்க முடியாது என்பதை நாம் அனைவரும் உணருவோம். அந்நிலை வந்துசேர ஆவன செய்வோம், வாருங்கள்!
நன்றி: www.keetru.com
சூலூர் பாவேந்தர் பேரவை.
38, கலங்கல் பாதை,
சூலூர் - 641 402, கோவை.
ஏச்சுப் பேச்சையும், கல்லடி, சொல்லடி, செருப்படி, சாணியடி, அழுகிய முட்டை அடி இவற்றையும் எதிர் கொண்டார். ஆனால் அடிக்க அடிக்க மேலே மேலே சீறி எழும் பந்துபோலப் பேச்சிலும் எழுத்திலும் கிளர்ச்சியிலும் ஊக்கம் குன்றாமல் உழைத்தார்.
தன்னைப்போன்ற மனிதனை - வா, போ, வாடா, போடா என்று அழைப்பதை வெறுத்தார். தொடாதே, தீண்டாதே, இந்தத் தெருவில் நடக்காதே என்ற உரிமைப் பறிப்பைக் கடுமையாகக் கண்டித்தார். அவ்வுரிமைகளை மீட்டுத்தர அயராது பாடுபட்டார். அடியே, ஏண்டி, வாடி, போடி என்று தத்தம் மனைவியை, மற்ற சாதிப் பெண்களை அழைப்பதைச் சாடினார்.
கல்லையும், செம்பையும் கடவுளாக எண்ணிய கோடிக்கணக்கான மக்களைச் சம்மட்டிகொண்டு அடிப்பதுபோல் சாடி, தக்க விளக்கம் கூறிச் சிந்திக்க வைத்தார்.
மனிதனை, மனிதனாக மதிக்கும் மாண்பைக் கற்பித்தார். இவ்வகையில் படிந்து போன பழைமையை அப்பட்டமாக-அம்மணமாக - நிருவாணமாகத் தோலுரித்துக் காட்டிப் பேசியவர் அவர்; எழுதியவர் அவர். 53ஆண்டுக்காலம் ஓய்வறியாத போர் வீரராகப் பரப்புரை செய்தவர்; களத்தில் நின்றவர்; போராடியவர் அவர். அவர்தாம் பெரியார் ஈ.வெ.ரா.
அவருடைய அடிப்படைக் கொள்கைகள் மானிடத்தை எல்லாவித அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை செய்வதை நோக்கமாகக்கொண்டவை.
1. தாம் பிறந்த நாட்டில் பிறவி காரணமாக மேல்சாதி, கீழ்ச்சாதி இருப்பதை அடியோடு ஒழிக்க விரும்பினார்.
2. தாம் வாழும் சமுதாயத்தில் உழைப்பாளிகளாகவும் பெரிய எண்ணிக்கையிலும் உள்ள வெகு மக்களுக்குச் சமுதாயம், கல்வி, அரசியல் பதவி, அரசு வேலை இவற்றில் உரிய பங்கு வேண்டும் என்பதற்காக 53 ஆண்டுக்காலம் இடைவிடாது போராடினார். அப்போராட்டம் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்கிற வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.
இவற்றுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசிலும் மற்ற மாநில அரசுகளிலும் சட்ட வடிவங்களில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. அவர் கோரியபடி, விகிதாசார வகுப்புவாரி உரிமை, 53 ஆண்டுக்கால அவருடைய உழைப்புக்குப் பிறகும் - அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆன பிறகும் எட்டப்படாததாக இருக்கிறது.
3. மானிடத்தில் செம்பாதி - சரிபகுதி பெண்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் முதன்முதலாகப் பதிந்த சமத்துவ எண்ணம் ஆணுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்ணுக்கு வந்துசேரவேண்டும் என விரும்பிய அவர் 1929இலேயே அவற்றுக்குச் சட்ட வடிவிலான பாதுகாப்புக் கோரினார். அவர் கோரிய பெண்ணுரிமைப் பாதுகாப்புகள் இந்திய அரசினாலேயே சட்ட வடிவில் தரப்பட முடியும். அவர் சட்ட அவையை நாடாதவர். ஆயினும், அவரால் போற்றப்பட்ட சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். தாம் இந்திய அமைச்சராக விளங்கியபோது பெண் மக்களுக்கு உரிய எல்லா உரிமைகளுக்கும் ஏற்ற சட்டங்களை 1947லேயே முன்மொழிந்தார். 1955லும் 1956லும் அவை நிறைவேற்றப்பட்டன.
பெண்ணுக்குச் சொத்தில் பங்கு உரிமை, மணவிலக்கு உரிமை, தத்துப்பிள்ளை ஆகும் உரிமை, மறுமண உரிமை எல்லாம் வந்துசேர்ந்தன. ஆயினும் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் முதலானவற்றால் நெஞ்சில் பதிக்கப்பட்ட எண்ணங்களிலிருந்து - அந்தப்பண்பாட்டிலிருந்து பெண்களும் விடுபடவில்லை; ஆண்களும் விடுபடவில்லை; மக்கள் தலைவர்களும் விடுபட வில்லை; மெத்தப் படித்தவர்களும் விடுபடவில்லை; ஆட்சியில் உள்ளவர்களும் விடுபடவில்லை; கல்வித் திட்டமும் விடுபடவில்லை. மேலும் நூல்கள், புதினங்கள், பருவ ஏடுகள், நாளேடுகள் என்கிற அறிவு புகட்டும் கருவிகள் எல்லாவற்றிலும் இன்றும் இவை படிந்துள்ளன; இவை மேலாதிக்கம் பெற்றுள்ளன.
கருத்துகளை உருவாக்குகிற- பொழுது போக்கப் பயன்படுகிற திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, அரியதான இணையதளம் எல்லாவற்றிலும் - எல்லா மொழிகளிலும் இவை செல்வாக்கோடு திகழ்கின்றன.
சட்டங்கள் வடிவத்தில் தமிழகத்தில் வந்திருக்கிற பெண்ணுரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, அனைத்துச் சாதியினரும் அருச்சகராகும் உரிமை, வகுப்புவாரி உரிமை பற்றிய எதுவும் கல்வியில் எந்த வகுப்பிலும்- முதல் வகுப்பில் தொடங்கிப் பட்ட மேற்படிப்பு வரையில் பாடமாக வைத்துக் கற்பிக்கப்படவில்லை. இவையெல்லாம் 1951முதல் அரசமைப்புச் சட்டத்திலும், தமிழக அரசுச் சட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பட்டவை.
1950-60, 1960-70, 1970-80, 1980-90, 1990-2000, 2000-2010 என அறுபதாண்டுக் காலத்தில் இங்கே பிறந்த - வளர்ந்த - படித்த-உயர்கல்வி பெற்ற கோடிக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வித் திட்டம் மூலம் இவை கற்பிக்கப்படவே இல்லை. அத்தகைய மூடத்தனமான கல்வியைப் பெற்று, பழைமை எண்ணங்களிருந்து விடுபடாத கோடிக்கணக்கானவர்கள் அடங்கிய மக்கள் பரப்பில் எங்கோ ஒரு மூலையில் நாள்தோறும் பெரியார் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதைச்செய்கிறோம்.
“கடவுள் இல்லை”, “கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”,
“பார்ப்பான் என்றும், பறையன் என்றும், சூத்திரன் என்றும் சொல்லாதே!”;
“இராமன் குடிகாரன்; சீதை விபச்சாரி”
“கந்தன் பிறப்புக் கதை அருவருப்பானது”
“ஆணுக்குப் பெண் சரிநிகர்”
எனத் தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்தத் தெருவிலும், எந்தச் சிலரும் இன்று மேடையேறிப் பேசலாம்; முழக்கலாம். இந்தஒரு வெற்றியை நமக்குப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். 1960, 1970களில் அவருடைய சொற்பொழிவுகளை எப்போதோ கேட்டவர்கள்; எங்கோ படித்தவர்கள்; அவரை நேரில் பார்த்தவர்கள்; 70,80 வயதினராக எல்லா இடங்களிலும் இன்று இருக்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் இவர்கள் மறைந்துவிடுவர்.
“அவர்கள் பெரியார் கட்சிக்காரர்கள்; அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்று கூறிவிட்டு, அவற்றைத் தாங்கிக்கொள்கிறார்கள் (கூடிடநசயவந) தமிழக மக்கள். அவ்வளவுதான். இது நமக்கு வெற்றிபோல் தோன்றுகிறது. ஆனால், அவர்கள் எல்லோரும் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்பது இந்த வடிவத்தில்தான் இன்று உள்ளது.
வேறு எப்படி அவருடைய அடிப்படைக்கொள்கை வெற்றிபெற்றுள்ளது என்பதை நடுநிலையிலிருந்து நெஞ்சில் கை வைத்துச் சிந்தித்து நாம் விடைகூற வேண்டும்; எண்பிக்க வேண்டும்; நிலைநாட்ட வேண்டும்.
இரண்டு செய்திகளை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம் .
1. ஆணும் பெண்ணும் சமம் என்னும் எண்ணம் அவருடைய பிஞ்சு நெஞ்சில் 1887 வாக்கில் பதிந்தது.
2. அந்தச் சமத்துவம் வந்து சேருவதற்கான வழிவகைகள்பற்றி - சட்டப் பாதுகாப்புகள்பற்றி 1929இல் தெளிவான திட்டங்களைச் சுயமரியாதை இயக்க முதலாவது மாநாட்டுத் தீர்மானங்களாக அவர் வடித்துத் தந்தார். அவையெல்லாம் உரிமையியல் சட்டம் சார்ந்தவை. அவற்றைப்பற்றிய சட்டங்களைச் செய்திட அன்றைய மாகாண அரசுக்கோ, இன்றைய மாநில அரசுக்கோ உரிமையில்லை. இந்திய அரசு என்கிற மய்ய அரசுதான் அதற்கான சட்டங்களைச் செய்ய முடியும்.
மய்ய அரசில் திராவிட அரசியல் கட்சியினர் என்றும் பெரும்பான்மைபெற இயலாது. அங்குப் பெரும்பான்மை பெற்றிருந்த தேசிய காங்கிரசுக் கட்சியினரும், சிறுபான்மையினராக இருந்த பொதுவுடைமைக் கட்சியினரும் இதில் முதலடியை எடுத்துவைக்க முன்வரவில்லை.
ஆனால், 1931 முதல் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டிருந்த ஈ.வெ.ரா. வுக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 1936 முதற்கொண்டும், 1940சனவரி முதற்கொண்டும் நெருக்கமான உறவும் நட்பும் ஏற்பட்டன. 1954இல் இந்த நட்பு உச்ச நிலையை அடைந்தது. இருவரிடையே நல்ல புரிதலும் ஏற்பட்டது.
பெரியார் விரும்பிய பெண்ணுரிமைச் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் சட்ட வடிவம் தருகிற தன்மையில், 1947இல் “இந்துச் சட்டத்திருத்த மசோதா” என்கிற பெயரில் பலவற்றை நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவையெல்லாம் ஒன்றுவிடாமல் டாக்டர் அம்பேத்கர்1951இல் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகு- 1955லும் 1956லும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.ஆனால், அச்சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்தை இங்கு ஆடவரும் உருவாக்கவில்லை; மகளிரும் உருவாக்கவில்லை. அரசும் உருவாக்கவில்லை.
மேலும், ஆண் - பெண் சம உரிமை முழுவதுமாக வந்து சேர வேண்டப்படுகின்ற சமதர்ம சமுதாய அமைப்பு இங்கு மலரவில்லை. இது மலராமல் இங்கு ஆண்-பெண் சமத்துவம் என்பது முழுமையாக வரமுடியாது. உலகம் முழுவதற்கும் இது பொருந்தும், நிற்க.
1947இல் பெண்ணுரிமைபற்றிய சட்ட வரைவுகளை முன்மொழிந்த டாக்டர் அம்பேத்கர், மிகப் பெரிய தொலைநோக்குடனும் அறிவுக் கூர்மையுடனும் இன்னொரு சட்டத்திருத்தத்தையும் முன்மொழிந்திருந்தார்.
அது என்ன?
“இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அந்தத் தேதிவரையில் நடப்பிலிருந்த பழைய பழக்க வழக்கச் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டா” என்பதே அச்சட்ட வரைவின் அமைப்பாகும்.
அது என்றைக்கு 1947இல் முன்மொழியப் பட்டதோ அன்று முதல் 1951 வரையில் இராசேந்திர பிரசாத் அதைக் கடுமையாக எதிர்த்தார்; தேசிய காங்கிரசைச் சார்ந்த பழைமைவாதிகள் எதிர்த்தனர். 1951இல் அந்த வரைவு ஏற்கப்படாமல் அடியோடு நீக்கப்பட்டது.
அந்த விதி நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று அரசமைப்புச் சட்டத்தில், விதிகள் 13,372 இவற்றில் உள்ள, “நால்வருணம் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.
விதி 25இல் உள்ள “பழைய பழக்க வழக்கங்கள், ஆகமவிதிகள் இன்றும் செல்லும்” என்கிற பாதுகாப்பு இருக்காது.
நால்வருணம், பழைய வழக்கச்சட்டங்கள் இவற்றைப் பாதுகாப்பதற்காக இருக்கிற விதிகள் இவை என்பது பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்குத் தெரியாது; நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் இவர்களில் பலருக்கும் தெரியாது.
இவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி “நால்வருண ஏற்பாட்டையும், பழைய பழக்கவழக்கச் சட்டங்களையும், ஆகம விதிகளையும் பாதுகாக்கிற விதிகள் 13, 25, 372 ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குங்கள்” என்று கோரித்தான் 26.11.1957இல் அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதிகளை மட்டும் அச்சிட்டு எரிக்கச் செய்தார், பெரியார்.
10,000 கறுஞ்சட்டை வீரர்கள்-3 ஆண்டு தண்டனை உண்டு; 3000 ரூபா தண்டம் உண்டு என்று தெரிந்தே அரசமைப்புச் சட்டத்தை எரித்தார்கள். உலக நாடுகளில் எதிலும் அன்றுவரை அரசியல் சட்டத்தை எவரும் எரிக்கவில்லை. இதைக்கண்டு இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது; உலகமே மூக்கின் மேல் விரலை வைத்துச் சிந்தித்தது.
“அரசியல் சட்டம் புனிதமானது” என்ற எண்ணம் உலகெங்கும் ஆட்சி செலுத்திய காலமது. பெரியாரின் கட்டளையை ஏற்று 10,000 பேர் அரசியல் சட்டத்தை எரித்தனர். 3000 பேர் ஒரு மாதம் வெறும் காவல் தண்டனை முதல் மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வரை பெற்றனர். நான் 18 மாதம் கடுங்காவல் பெற்றேன்.
சிறை வாழ்வின்போதே இரு மறவர்கள் மாண்டனர். வெளியில் வந்தவுடன் 20 பேர் செத்தனர். பல நூறு குடும்பங்கள் சீரழிந்தன. அவர்களுள் ஓராயிரம் பேர் 2010 இல் வயிற்றுப்பாட்டுக்குப் போராடுவோராக உள்ளனர் என்பதை நேரில் நாம் கண்டிருக்கிறோம்.
நால்வருணம், பழக்க வழக்கம், ஆகமம் இவற்றைப் பாதுகாக்கும் சட்டத்தை 53 ஆண்டுகளுக்கு முன் எரித்தோம். அதன் காரணமாக, அச்சட்டப் பகுதியை நீக்குகிற முயற்சியில் எத்தனைத் தப்படி முன்னேறியிருக்கிறோம்?
கடந்த 53 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு, சனதா, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சிகள் என்கிற அனைத்திந்தியக் கட்சிகளோ, மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமோ பின்னர் தோன்றிய அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மற்றும் வட மாநிலக்கட்சிகளோ நாடாளுமன்றத்தில் இதற்காக என்ன முயற்சியை எடுத்தன?
சட்ட மன்றத்துக்குப்போகாத திராவிடர் கழகமோ, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியோ, பெரியார் திராவிடர் கழகமோ, சிந்தனையாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மானிட உரிமைக் காப்பு அமைப்பு முதலானவையோ இதற்காக மேற் கொண்ட முயற்சி என்ன? எப்போது முயன்றார்கள்? இங்கே தமிழ்நாட்டில் மட்டும் முயன்றால் என்ன பயன்? பழக்க, வழக்கம், ஆகம விதி, இவற்றுக்கான பாதுகாப்பை அப்படியே வைத்துக்கொண்டு -அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆகலாம் என்கிற சட்டமும், சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்கிற சட்டமும் எந்த அளவுக்குப் பயன்படும்?
சுயமரியாதைத் திருமணச் சட்டம் 20-1-1968 நடப்புக்கு வந்தது.
அத்துடன் சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? ஏன் அது செல்லாது என்று கூறப்பட்டது? அது செல்லுபடியாவதற்கு ஏற்றபடி, 1968இல் சட்டம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் யாவை? அதற்கு மாறாக, ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த திருமண முறையால் ஏற்பட்ட கேடு அல்லது இழிவு அல்லது குறைபாடு என்ன? என்கிற செய்திகள் பற்றி, 1968க்குப் பிறகு கடந்த 42 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஓர் ஆண்டு முழுவதும் நடைபெறும். இந்துக்கள் வீட்டுத் திருமணங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் த்தனை என்பதுபற்றி, எந்த ஓர் ஆண்டிலும் புள்ளி விவரம் பதிவு செய்யப்படவில்லை. அந்தந்த ஊர் மணியக்காரர் (ஏ.ஹ.டீ) வழியாக இனி வரும் ஓர் ஆண்டிலாவது அப்படிப்பட்ட புள்ளி விவரம் அரசினால் பதிவு செய்யப்படவேண்டும்.
இவ்விரண்டு திட்டங்களையும் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசினர் மேற்கொள்ள வேண்டும் - நிறைவேற்ற வேண்டும் என அன்புடனும் வற்புறுத்தியும் வேண்டிக் கொள்கிறோம். நிற்க.
“பழக்க வழக்கம், ஆகம விதி என்பவை எழுதப்பட்ட சட்டங்களைவிட வலிமையானவை” என்பதுதான் இந்துச் சட்டத்தின் உயிரான பகுதியாகும். இவை அடியோடு ஒழிக்கப்படுவது என்பது இந்திய அளவிலான இந்திய அரசமைப்பை அடியோடு மாற்றுவதனால் மட்டுமே முடியும்.
இதைப் புரிந்து கொள்ளாமல், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1968முதல் நிறைவேற்றப்பட்ட இவ்விரண்டு சட்டங்கள் மட்டுமே நாம் பெற்ற வெற்றி என்று நம்பினால் அது தவறாகும்.
நால்வருணப் பாதுகாப்பை ஒழிக்க இவை போதா. ஆகம விதி, பழக்கபழக்க வழக்கச் சட்டம், இவற்றை நீக்கிவிடவும் இவை உதவமாட்டா.
பார்ப்பனப் புரோகிதம், கோயில்கள், மடங்கள், மசூதிகள் மாதா கோயில்கள் இவற்றுக்கு உரிய அசையும் சொத்துகள், அசையாச் சொத்துகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இங்கு இருக்கும். இந்துச் சட்டமும் அரசமைப்புச் சட்டமும் நீதி மன்றங்களும் நாடாளுமன்றமும் இவற்றுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இச் சூழல்களில் “மதச்சார்பற்ற” தன்மை இங்கே எப்படி வரும்?
இவற்றைப்பற்றிப் பெரியார் தொண்டர்கள் எல்லோரும் பொறுமையாக எண்ணிப்பார்க்க வேண்டும்.
1. தந்தை பெரியார் 1919 முதல் வகுப்புவாரி உரிமைக்குக் குரல் கொடுத்தார். போராடினார். சட்டப்படி இது ஏற்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை வெகு மக்களுக்கு விகிதாசாரப் பங்கு உரிமை வரவில்லை.
2. 1922 முதல் தீண்டாமை ஒழிப்பு, நால் வருண ஒழிப்புக் கோரி முழங்கினார். இவற்றுக்குப் பாதுகாப்புத் தரும் இராமாயணம், மனுநீதி இவற்றை எரிக்கச் சொன்னார். ஆனால் இவற்றைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டம் இன்றும் நம்மை ஆள்கிறது. இதை அடியோடு மாற்றிட அவர் விரும்பினார். அதுபற்றி இன்றளவும் எவரும் இணக்கமான முயற்சியை மேற்கொள்ளவில்லை.
3. 1927 முதல் கருத்தளவில் சமதருமம்பற்றிப் பேசிய பெரியார், 1932 முதல் 1935 வரையிலும் தீவிர சமதருமப் பரப்புரை செய்தார். 1964 முதல் 1973 வரை அப்பணியைத் தொடர்ந்து செய்தார். சமதருமம் வராமல் பெண்ணுரிமை முழுவடிவில் இங்கு வராது. தீண்டாமைக் கொடுமை ஒழியாது. மூடநம்பிக்கை ஒழிப்பு வெற்றி பெறாது என்கிற புரிதல் பெரியார் தொண்டர்களுக்கு வரவில்லை.
4. 1938இலும், 1939இலும் பெரியார் முன் வைத்த “தமிழ்நாடு”, “திராவிடநாடு” பிரிவினைக் கோரிக்கை தெளிவற்றது. 1945 செப்டம்பர் 30இல் அவர் முன் வைத்த “சுதந்தரத் திராவிடநாடு” கோரிக்கையும், 1.11.1956இல் அவர் முன்வைத்த “சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையும் மிகத் தெளிவானவை. “தனிச் சுதந்தர நாடு” கோரிக்கைகள், சோசலிச சோவியத்து ஒன்றியம் 1990இல் கலைக்கப்பட்ட பிறகு செல்வாக்கோடு திகழ முடியவில்லை. அப்போது முதல் உலக நாடுகள் மன்றம் என்ற அய்க்கிய நாடுகள் அவை பல் இல்லாத பாம்பாகிவிட்டது. அய்ரோப்பாவையும், சீனாவையும், சப்பானையும், மிஞ்சி இன்னமும் அமெரிக்கா ஒற்றை அதிகார ஆதிக்க மய்யமாக விளங்குகிறது. அது உலக அமைதியை உருக்குலைக்கிறது. மொழிவழி, இனவழி அடிப்படையிலான விடுதலை இயக்கங்களைத் துடைத்தெறிகிறது.
இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு, இந்திய ஒற்றை ஆதிக்க மய்யத்தை உடைத்துத் தன்னுரிமைபெற்ற தமிழ்நாடு - மற்றும் உள்ள மொழி வழி மாநிலங்களைக் கொண்ட ஓர் உண்மையான மதச்சார்பற்ற சமதருமக் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியாவை உருவாக்கினாலன்றி, தந்தை பெரியாரின் கொள்கைகளை நாம் வென்றெடுக்க முடியாது என்பதை நாம் அனைவரும் உணருவோம். அந்நிலை வந்துசேர ஆவன செய்வோம், வாருங்கள்!
நன்றி: www.keetru.com
சூலூர் பாவேந்தர் பேரவை.
38, கலங்கல் பாதை,
சூலூர் - 641 402, கோவை.
Thursday, November 18, 2010
சிறை மட்டும் தான் தமிழனுக்கு மிச்சம்- சிமான்
சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில்
முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார்.
'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.
"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,
நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்.
'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?
இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.
உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது
இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?
ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!
அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர, சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.
அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம்,
'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.
- நன்றி ஆனந்தவிகடன்
முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார்.
'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.
"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,
நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்.
'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?
இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.
உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது
இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?
ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!
அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர, சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.
அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம்,
'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.
- நன்றி ஆனந்தவிகடன்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனையும் கடிப்பது என்பார்கள். தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதே சிறுபான்மையினரையும், தமிழ்சிந்தனையாளர்களையும் கைது செய்வதற்கே என்றாகிவிட்டது. தோழர்.சிமானை தொடர்ந்து இப்போது நம் புதுவைத்தோழர்கள். வெறும் சடங்கு என்கிற ரீதியில் சடங்கள் கையாளப்படுவது தெளிவாக தெரிகிறது. முதலில் சாதாரணமாக கைது செய்பவர்கள் தமிழ்நாட்டு மேலிடத்திற்கு தெரியப்படுத்தி அவர் சொல்லுகிறபடி போலி ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேர்த்துக்கொண்டு தேசியப்பாதுகாப்பில் கைது செய்கிறார்கள். நான் கேட்கிறேன் இந்த தேசத்திற்கு யாரால் கேடோ அவர்களைதானே தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். அண்ணன் லோகு அய்யப்பன் மற்றும் தோழர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு 17 ஆயிரம் கோடி நட்டம் செய்தவரா?.
இவர்களோடு ஒத்துப்போனால் பாதுகாப்பு எதிர்த்தால் தேசிய பாதுகாப்பு. உண்மையில் தேசியப்பாதுகாப்பில் கைது செய்யப்படவேண்டியவர்கள் கருணாநிதி குடும்பத்தார் தான்.
லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்த தவறாக அரசு எந்திரம் முன்வைப்பது "புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது" எனில் எந்த வெளிநாடு? இவர்களின் கூற்றுப்படி அகதிகள் நிரந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் முகாம்களிலேயே இருக்கவேண்டுமா?
ரங்கூனிலிருந்து அகதியாக வந்தவர்கள் தொடங்கி இன்னும் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒன்றெர கலந்து அகதி என்ற சுவடே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருக்க. ஈழத்திலிருந்து வந்த தமிழர்கள் மட்டும் 30,35 ஆண்டுகளாக முகாம்களிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்களே அவர்களை எப்போது விடுவிப்பார்கள்?
நாம் முள்ளிவாய்க்கால் முகாமில் இருப்பவர்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தமிழ்நாட்டு முகாம்களை கண்டுக்கொள்வதேயில்லை, சிங்களவன் தமிழனை அழித்தால்தான் போராடனுமோ? தமிழை அழிக்கும் தமிழனுக்கு எதிராக போராட வேண்டாமோ. இதைதான் லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்திருக்கிறார்கள். தமிழனிடமிருந்து தமிழனை காப்பாற்றி இருக்கிறார்கள்.
"என் எதிர்வீட்டுக்காரனை கைது செய்தான் பேசாமல் இருந்தேன்" என்கிற ஜெர்மானிய பழமொழிப்போல் ஓ... எருமைமாட்டு தமிழர்களே எம் தோழர்கள் கைதாவது உங்கள் உரிமைகளுக்காகதான் என்பதை புரியாமல் புரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பீர்கள் ஆனால், இலவச தொலைக்காட்சிகளை கொடுத்து உங்களை "காயடித்து" வைத்திருப்பதை உணராமல் இருப்பிர்களானால். நாளை இதே அரசு உங்களை நடு வீதியில் வைத்து நாயை சுடுவதுப்போல் (உம்:மணிப்பூர்) சுடும் என்பதை பதிவு செய்து. கைதாகிய தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
இவர்களோடு ஒத்துப்போனால் பாதுகாப்பு எதிர்த்தால் தேசிய பாதுகாப்பு. உண்மையில் தேசியப்பாதுகாப்பில் கைது செய்யப்படவேண்டியவர்கள் கருணாநிதி குடும்பத்தார் தான்.
லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்த தவறாக அரசு எந்திரம் முன்வைப்பது "புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது" எனில் எந்த வெளிநாடு? இவர்களின் கூற்றுப்படி அகதிகள் நிரந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் முகாம்களிலேயே இருக்கவேண்டுமா?
ரங்கூனிலிருந்து அகதியாக வந்தவர்கள் தொடங்கி இன்னும் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒன்றெர கலந்து அகதி என்ற சுவடே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருக்க. ஈழத்திலிருந்து வந்த தமிழர்கள் மட்டும் 30,35 ஆண்டுகளாக முகாம்களிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்களே அவர்களை எப்போது விடுவிப்பார்கள்?
நாம் முள்ளிவாய்க்கால் முகாமில் இருப்பவர்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தமிழ்நாட்டு முகாம்களை கண்டுக்கொள்வதேயில்லை, சிங்களவன் தமிழனை அழித்தால்தான் போராடனுமோ? தமிழை அழிக்கும் தமிழனுக்கு எதிராக போராட வேண்டாமோ. இதைதான் லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்திருக்கிறார்கள். தமிழனிடமிருந்து தமிழனை காப்பாற்றி இருக்கிறார்கள்.
"என் எதிர்வீட்டுக்காரனை கைது செய்தான் பேசாமல் இருந்தேன்" என்கிற ஜெர்மானிய பழமொழிப்போல் ஓ... எருமைமாட்டு தமிழர்களே எம் தோழர்கள் கைதாவது உங்கள் உரிமைகளுக்காகதான் என்பதை புரியாமல் புரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பீர்கள் ஆனால், இலவச தொலைக்காட்சிகளை கொடுத்து உங்களை "காயடித்து" வைத்திருப்பதை உணராமல் இருப்பிர்களானால். நாளை இதே அரசு உங்களை நடு வீதியில் வைத்து நாயை சுடுவதுப்போல் (உம்:மணிப்பூர்) சுடும் என்பதை பதிவு செய்து. கைதாகிய தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
Monday, November 15, 2010
The Great Dictator- Globe Scene
சார்லி சாப்ளின்@கம்பீர நாயகன்
Sunday, November 14, 2010
தாய்மை நிறைந்த கவிதைகள்
நிலவு ததும்பும் நீரோடை/மணிமேகலை பிரசுரம் வெளியீடு.
பாசிலா ஆசாத்
தொன்ம மரபுகள் மாறாமல் வாழ்க்கையினை இயற்கையுடன் கட்டிப்போட்டு எக்கால சமுதாயத்திற்கும் வழங்கி தமிழின் நற்சுவை மாறாமல் பாதுகாக்கும் திறன் கவிதைகளுக்கு உண்டு. அதுப்போல தாய் மொழியின் மரபை கறந்து சுண்ட சுண்ட காய்ச்சி இலக்கியத் தேன் தடவும் கடமை கவிஞர்களுக்கும் உண்டு.
வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக அரசர்களின் துதிப்பாடிகளாய் திறிந்த புலவர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக்கொண்டு தமிழை விற்பதும். இவர்தான் புலவர் அவர்தான் பாடவேண்டும் அல்லது இவர் பாடுவது தான் கவிதை என திருட்டு தீர்ப்புகள் எழுதுவதும். தொன்மத் தமிழில் நச்சுக்கலந்திடவுமே ‘நூல்’சிந்தனையாளர்கள் குலக்கல்வி முறையினை வலியுறுத்தி தோற்றனர்.
இலக்கணம் என்ற பெயரில் வார்த்தை வித்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கையினை பெரும்பாலும் பேசாமல் விட்டதாலோ என்னவோ மரபுக்கவிதைகள் நம்மை விட்டு தூரத்துப் புள்ளியாகிவிட்டன. இதோ இன்று மலர்கின்றன புதுக்கவிதைகள் மக்களின் இலக்கியம் மக்களுக்காவே மக்களால் பேசப்படுகிறது.ஆம் மரபுக்கள் உடைக்கும் காலமிது. தாயின் கருத்து தம்மக்கட்கு திணிக்கலாகாது. திணிப்பவர் முகத்திலேயே திணிப்புகளை உமிழும் திறன்மிகு புதியவர்கள் களமிறங்கினாலும் இலக்கியமென்பது இசுலாமியர்களை விட்டு விலகி நின்றிருந்தது ஒரு காலம .அதுவும் இசுலாமிய பெண்களுக்கு…!
கவிதை என்றாலே இவள் காதலைதான் எழுதுவாள் எனக்கூறி சாத்திவைத்த கதவுகள் உடைத்து தம் மக்கள் வாழ்ககை பதிவினை கவியாய் எழுதவந்தவர்தம் வரிசையில் இதோ தாய்மை நிறைந்த கவிதைகளை தருகிறார் பாசிலா ஆசாத்.
கெட்டா போய்விட்டது இசுலாம் அல்லது குழைந்துபோய்விட்டதமா பாசிலாவின் உறுதி. ஏவ்வடிவில் இருந்தாலென்ன அவர்தம் ஆற்றலுக்கேற்படி பெண்ணுக்கும் கருவிகளை வழங்கி களத்தில் இறக்குவதுதானே தமிழ் மரபு தமிழனின் மரபு இசுலாமின் எழுச்சி. இதோ பாசிலாக்களின் கருவிகள் கவிதைகள் வடிவிலாக..
இயற்கையின் மீதாகவும் வாழ்ககையின் மீதாகவும் பாசிலாவுக்கு நேசிப்புகள் இருக்குமளவிற்கு அவற்றை குறித்தான் வாசிப்புகள் குறைவாக இருப்பதாக கவிதைகள் சொல்லுகின்றன.தூரிதப்படுத்துவாரேயானால் இன்னும் மெருகோடு இலக்கிய வானில் சிறகு பரப்பலாம்.
பெண்னை வைத்துப் புட்டிவிட்டு அவள் கையில் திறவுகோலையும் தந்துவிட்டு ‘திறந்தால்’ என்ற சட்டத்தையும் திணித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்க சமூகத்தில் பாசிலாவுக்கு பாதை போட்டு தந்த ஆசாத்துகளுக்கு (ஒரு ஓ போட்டேயாகவேண்டும்)நமது பாராட்டுகளை தந்தேயாகவேண்டும். அதே நேரத்தில் சிந்தனையும் செயல்பாடுகளும் நெறியாக்கமும் பாசிலாவினுடையது மட்டுமே பின் எதற்கு நூலில் பாசிலா ஆசாத் என்று பதிக்கணும். ஆணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பெண்கள் பலகோடி. இருப்பினும் எந்த ஆணும் தன் பெயருக்கு பின்னால் தன் துணைவியாளின் பெயரை போட்டுக்கொள்வதில்லையே இப்படியிருக்க பாசிலாக்கள் மட்டுமேன் ஆசாத்துகளுக்கு இலவச விளம்பரம் தரவேண்டும்.
எனதருமை ஆசாத்களுக்கு ஒர் வேண்டுகோள் இசுலாத்தில் பெண் பொத்திவைத்தும் போர்த்திவைத்தும் அடிமைபடுத்தப்படுகிறாள் என்ற மாற்றாரின் மக்கிப்போன சிந்தனைகளை கிழித்தெரிந்துவிட்டீர்கள். பட்டாம்பூச்சிகளை பறக்கவிட எண்ணிப்பின் ஏன் நூல் கட்டி பறக்கவிடணும். சிந்திப்பீர் சகோதரர்களே.
இறுதியாக ஒன்று சற்று உறுதியாகவும் கூட! எத்தனை கிளைபரப்பினும் ஆலமரம் விழுதுகளை மண்ணுக்கே அனுப்பும்.நாம் கற்ற கல்வி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதில் அய்யமில்லை. அதே வேளையில் தாய் மொழியில் பிற மொழி கலப்பென்பது நாம் பார்வையற்ற சமுதாயத்தை உறுவாக்குகிறோம் என்று பொருள்.
எதிர்கால சந்ததியினர் தனக்கென தாய்மொழியில்லாமல் தவிக்க விடுவது அவர்களை தாய்யில்லாமல் தவிக்க விடுவதைவிட கொடுமையாது என்பதை உணர்ந்து பாசிலா நிறைய பயின்றவர் எனினும் தன்னால் இயன்ற அளவிற்கு பிறமொழி கலப்பினை தவிர்ததற்கு பாராட்டுகள். மேலும் இயற்கையினை; நேசத்துடன் அழகுடன் மட்டுமன்றி அர்த்தத்துடனும் கவிதைகள் செய்து இலக்கிய வானில் பறக்க வாழ்த்துகள்.
தோழமையோடு
கவிமதி
பாசிலா ஆசாத்
தொன்ம மரபுகள் மாறாமல் வாழ்க்கையினை இயற்கையுடன் கட்டிப்போட்டு எக்கால சமுதாயத்திற்கும் வழங்கி தமிழின் நற்சுவை மாறாமல் பாதுகாக்கும் திறன் கவிதைகளுக்கு உண்டு. அதுப்போல தாய் மொழியின் மரபை கறந்து சுண்ட சுண்ட காய்ச்சி இலக்கியத் தேன் தடவும் கடமை கவிஞர்களுக்கும் உண்டு.
வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக அரசர்களின் துதிப்பாடிகளாய் திறிந்த புலவர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக்கொண்டு தமிழை விற்பதும். இவர்தான் புலவர் அவர்தான் பாடவேண்டும் அல்லது இவர் பாடுவது தான் கவிதை என திருட்டு தீர்ப்புகள் எழுதுவதும். தொன்மத் தமிழில் நச்சுக்கலந்திடவுமே ‘நூல்’சிந்தனையாளர்கள் குலக்கல்வி முறையினை வலியுறுத்தி தோற்றனர்.
இலக்கணம் என்ற பெயரில் வார்த்தை வித்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கையினை பெரும்பாலும் பேசாமல் விட்டதாலோ என்னவோ மரபுக்கவிதைகள் நம்மை விட்டு தூரத்துப் புள்ளியாகிவிட்டன. இதோ இன்று மலர்கின்றன புதுக்கவிதைகள் மக்களின் இலக்கியம் மக்களுக்காவே மக்களால் பேசப்படுகிறது.ஆம் மரபுக்கள் உடைக்கும் காலமிது. தாயின் கருத்து தம்மக்கட்கு திணிக்கலாகாது. திணிப்பவர் முகத்திலேயே திணிப்புகளை உமிழும் திறன்மிகு புதியவர்கள் களமிறங்கினாலும் இலக்கியமென்பது இசுலாமியர்களை விட்டு விலகி நின்றிருந்தது ஒரு காலம .அதுவும் இசுலாமிய பெண்களுக்கு…!
கவிதை என்றாலே இவள் காதலைதான் எழுதுவாள் எனக்கூறி சாத்திவைத்த கதவுகள் உடைத்து தம் மக்கள் வாழ்ககை பதிவினை கவியாய் எழுதவந்தவர்தம் வரிசையில் இதோ தாய்மை நிறைந்த கவிதைகளை தருகிறார் பாசிலா ஆசாத்.
கெட்டா போய்விட்டது இசுலாம் அல்லது குழைந்துபோய்விட்டதமா பாசிலாவின் உறுதி. ஏவ்வடிவில் இருந்தாலென்ன அவர்தம் ஆற்றலுக்கேற்படி பெண்ணுக்கும் கருவிகளை வழங்கி களத்தில் இறக்குவதுதானே தமிழ் மரபு தமிழனின் மரபு இசுலாமின் எழுச்சி. இதோ பாசிலாக்களின் கருவிகள் கவிதைகள் வடிவிலாக..
இயற்கையின் மீதாகவும் வாழ்ககையின் மீதாகவும் பாசிலாவுக்கு நேசிப்புகள் இருக்குமளவிற்கு அவற்றை குறித்தான் வாசிப்புகள் குறைவாக இருப்பதாக கவிதைகள் சொல்லுகின்றன.தூரிதப்படுத்துவாரேயானால் இன்னும் மெருகோடு இலக்கிய வானில் சிறகு பரப்பலாம்.
பெண்னை வைத்துப் புட்டிவிட்டு அவள் கையில் திறவுகோலையும் தந்துவிட்டு ‘திறந்தால்’ என்ற சட்டத்தையும் திணித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்க சமூகத்தில் பாசிலாவுக்கு பாதை போட்டு தந்த ஆசாத்துகளுக்கு (ஒரு ஓ போட்டேயாகவேண்டும்)நமது பாராட்டுகளை தந்தேயாகவேண்டும். அதே நேரத்தில் சிந்தனையும் செயல்பாடுகளும் நெறியாக்கமும் பாசிலாவினுடையது மட்டுமே பின் எதற்கு நூலில் பாசிலா ஆசாத் என்று பதிக்கணும். ஆணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பெண்கள் பலகோடி. இருப்பினும் எந்த ஆணும் தன் பெயருக்கு பின்னால் தன் துணைவியாளின் பெயரை போட்டுக்கொள்வதில்லையே இப்படியிருக்க பாசிலாக்கள் மட்டுமேன் ஆசாத்துகளுக்கு இலவச விளம்பரம் தரவேண்டும்.
எனதருமை ஆசாத்களுக்கு ஒர் வேண்டுகோள் இசுலாத்தில் பெண் பொத்திவைத்தும் போர்த்திவைத்தும் அடிமைபடுத்தப்படுகிறாள் என்ற மாற்றாரின் மக்கிப்போன சிந்தனைகளை கிழித்தெரிந்துவிட்டீர்கள். பட்டாம்பூச்சிகளை பறக்கவிட எண்ணிப்பின் ஏன் நூல் கட்டி பறக்கவிடணும். சிந்திப்பீர் சகோதரர்களே.
இறுதியாக ஒன்று சற்று உறுதியாகவும் கூட! எத்தனை கிளைபரப்பினும் ஆலமரம் விழுதுகளை மண்ணுக்கே அனுப்பும்.நாம் கற்ற கல்வி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதில் அய்யமில்லை. அதே வேளையில் தாய் மொழியில் பிற மொழி கலப்பென்பது நாம் பார்வையற்ற சமுதாயத்தை உறுவாக்குகிறோம் என்று பொருள்.
எதிர்கால சந்ததியினர் தனக்கென தாய்மொழியில்லாமல் தவிக்க விடுவது அவர்களை தாய்யில்லாமல் தவிக்க விடுவதைவிட கொடுமையாது என்பதை உணர்ந்து பாசிலா நிறைய பயின்றவர் எனினும் தன்னால் இயன்ற அளவிற்கு பிறமொழி கலப்பினை தவிர்ததற்கு பாராட்டுகள். மேலும் இயற்கையினை; நேசத்துடன் அழகுடன் மட்டுமன்றி அர்த்தத்துடனும் கவிதைகள் செய்து இலக்கிய வானில் பறக்க வாழ்த்துகள்.
தோழமையோடு
கவிமதி
Subscribe to:
Posts (Atom)